இலங்கை

இலங்கை: அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கெஹெலிய அறிவிப்பு

நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

தாம் அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு பெறுவது குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கும் வகையில் இன்று (13) கண்டி ராஜசிங்க மாவத்தையில் அமைந்துள்ள ஒக்ரே ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் மூலம் தனக்கு நியாயம் கிடைக்கும் என உறுதியாக நம்புவதாகவும், அதேபோல் நிரபராதியாக மீண்டும் அரசியலுக்கு வருவேன் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

நான் ஒரு அரசியல் அனாதை அல்ல, பொதுமக்களின் அங்கீகாரம் அப்படியே இருக்கும் சூழ்நிலையில் அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு பெறுகிறேன் எனவும் தான் தொழிலதிபராக சம்பாதித்த பணத்தின் மதிப்பை விட அரசியலில் ஈடுபடும் மக்களின் அன்பு மதிப்பு வாய்ந்தது என மேலும் தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்