இந்தியா செய்தி

சல்மான் கானை தொடர்ந்து ஷாருக்கானிடம் பணம் கோரி கொலை மிரட்டல்

பாலிவுட் திரையுலகில் கிங் கான் என்று அறியப்படும் பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவர் 50 இலட்சம் கேட்டுக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மும்பை பந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் விசாரணையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து அந்த அழைப்பு வந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக, நடிகர் சல்மான்கானுக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 31 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!