ஐரோப்பா

போரில் வடகொரியாவின் பால்ஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்திய ரஷ்யா!

வடகொரியாவில் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கவனம் செலுத்தி, ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கு வசதியாக இருப்பவர்கள் மீது கூடுதல் தடைகளை விதிப்பதில் கவனம் செலுத்தும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் பேச்சாளர் ஜோன் கார்பி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவும் வடகொரியாவும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அமெரிக்கா முன்பு தெரிவித்திருந்தது.

900 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கக்கூடிய வடகொரியாவின் தானியங்கி ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துவதாக முதல்முறையாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்காவின் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்