ஐரோப்பா

கியேவ் மீது இரவு முழுவதும் தாக்குதல் நடத்திய ரஷ்யா – குழந்த உட்பட மூவர் பலி!

கியேவ் மீது ரஷ்யா இரவு முழுவதும் நடத்திய தாக்குதல்களில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைநகரில் அரசாங்க அலுவலகம் உட்பட ஏராளமான கட்டிடங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.

கியேவின் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ, தாக்குதலுக்குப் பிறகு நகர மையத்தில் உள்ள அரசாங்க கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இது ட்ரோன்கள் மழை பொழிந்து, அதைத் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்ததாகவும் கூறினார்.

நகரின் பெச்செர்ஸ்கி மாவட்டத்தில் உள்ள கட்டிடத்திலிருந்து அடர்த்தியான புகை எழுவதை ராய்ட்டர்ஸ் சாட்சிகள் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்