செய்தி

காசா மக்களுக்கு நிவாரணம் – 15 லட்சம் டன் உதவிப் பொருட்களை அனுப்பிய எகிப்து

காசா பகுதி மக்களுக்காக 15 லட்சம் டன் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்ப எகிப்து ஆயத்தமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிவாரண உதவிகளை ரபா எல்லைச்சாவடி வழியாக அனுப்ப எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது.

200க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 5,000 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

இதுவரை, காசாவுக்குள் நிவாரணங்கள் இஸ்ரேல் கட்டுப்பாட்டிலுள்ள கெரெம் ஷாலோம் எல்லை வழியாக மட்டுமே அனுப்பப்பட்டு வந்த நிலையில், எகிப்து ஜனாதிபதி அப்தெல் அல்-சிசியின் நேரடி முயற்சியின் மூலம் ரபா எல்லை வழியாக அனுப்ப அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, காசா மக்களின் கடுமையான தேவையை முறையாக எதிர்கொள்ளும் முக்கியமான பரிவர்த்தனையாக பார்க்கப்படுகிறது.

 

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி