பங்களாதேஷின் கடனை செலத்த தயார் – இலங்கை!
பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட கடனை ஆகஸ்ட் – செப்டம்பர் மாதத்திற்குள் செலுத்த எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று மாதங்களுக்குள் செலுத்தும் வகையில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டது.
(Visited 9 times, 1 visits today)