இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ரணில்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராக போட்டியிடுவது நிச்சயம் என்றும், அனைத்து கட்சிகளின் ஆதரவுடன், அவர் வெற்றிப்பெறுவார் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தல் 2024இல் இடம்பெற இருக்கிறது. அதில் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களமிறங்குவது நிச்சயமாகும். அதேபோன்று அதில் அவர் வெற்றி பெறுவதும் உறுதியாகும்.

அவர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடமாட்டார்.  ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெறுவதும் உறுதியாகும். ஏனெனில் ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளின் ஆதரவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைப்பது நிச்சயமாகும்.

ஏனெனில் தற்போதே கட்சிகளில் இருந்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பலரும் முன்வந்திருக்கின்றனர். எதிர்காலத்தில் இன்னும் பலர் எம்முடன் இணைந்துகொள்ள இருக்கின்றனர் என்றார்.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content