இந்தியா

மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் இராமேஸ்வரம் மீனவர்கள்

இலங்கை கடற்படையின் தொடர்ச்சியான கைது நடவடிக்கையினை தடுப்பதற்கு தவறிய இந்திய மத்திய அரசை கண்டித்து எதிர்வரும் 26ஆம் திகதி கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் இன்று நடத்திய கூட்டத்தில் வைத்து குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து கடற்றொழிலாளர்கள் பேரணியாக வந்து கடலில் இறங்கி திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றி முடிவு செய்துள்ளனர்.

அத்துடன், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பின்னரும் தீர்வு கிடைக்காவிட்டால் தமிழகம் முழுவதிலும், மீனவர்களை ஒன்று திரட்டி போராட உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும்.

மீன்பிடி தடைக்காலம் அறிவிக்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை படகுடன் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் கைது நடவடிக்கை நடைபெறாமல் இரு நாட்டு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content