இலங்கை செய்தி

அமெரிக்கா பயணத்திற்கு முன் கியூபா செல்லும் ஜனாதிபதி ரணில்

இரண்டு பிரதான சர்வதேச மாநாடுகளில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 13 ஆம் திகதி முற்பகல் வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் மற்றும் கியூபாவின் ஹவானாவில் நடைபெறும் ஜீ77 அணி மாநாடு ஆகியவற்றில் கலந்துக்கொள்வதற்காகவே ஜனாதிபதி வெளிநாடு செல்ல உள்ளார்.

முதலில் கியூபாவில் ஹவானா நகருக்கு செல்லும் ஜனாதிபதி ஜீ 77 மாநாட்டில் கலந்துக்கொள்கிறார்.

ஜீ 77 மாநாடு என்பது பொருளாதார ரீதியாக அபிவிருத்தியடைந்து வரும் 134 நாடுகளை அங்கத்துவமாக கொண்ட ஒரு அமைப்பாகும். இலங்கையும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றது.

இதன் பின்னர், அமெரிக்காவின் நியூயோர்க் செல்லும் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி எதிர்வரும் 21 ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை