ஐரோப்பா

போலந்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை : ரஷ்யா அதிரடி

வலுவான சான்றுகள்” வழங்கப்படும் வரை போலந்து வான்வெளியில் ஏவுகணைக்கு மாஸ்கோ விளக்கம் அளிக்கப் போவதில்லை என போலந்தில் உள்ள ரஷ்யாவின் பொறுப்பாளர் ஆண்ட்ரே ஓர்டாஷ் கூறியுள்ளார்.

வலுவான ஆதாரங்கள் வழங்கப்படும் வரை, நாங்கள் எந்த விளக்கத்தையும் கொடுக்க மாட்டோம், ஏனெனில் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 2022 இல் போலந்து எல்லைக் கிராமத்தில் ஏவுகணை தாக்கி இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

“அப்போது, ​​அவர்கள் இந்த சம்பவத்திற்கு ரஷ்ய தரப்பையும் குற்றம் சாட்ட முயன்றனர். இந்த ஏவுகணை உக்ரைன் ராணுவத்தால் வீசப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது” என்று ஓர்டாஷ் கூறியுள்ளார்.

மேலும் போலந்து நாட்டின் வான்வெளியை மீறியதாக சந்தேகிக்கப்படும் ரஷ்ய ராக்கெட்டின் கூறுகளைத் தேடும் நடவடிக்கையை போலந்து புதுப்பித்து வருவதாக போலந்து இராணுவம் தெரிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்