ஐரோப்பா

பிரித்தானியாவில் பரிதாப நிலை – படுக்கை கிடைக்காமல் காத்திருக்கும் நோயாளிகள்

பிரித்தானியாவில் நோயாளிகள் மருத்துவமனை படுக்கைக்காக 24 மணி நேரம் அல்லது அதற்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு சுமார் 49,000 அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளிகள் இவ்வாறு காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமை கோரிக்கை மூலம் இந்த திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

சில நோயாளிகள் வார்டில் இடம் கிடைக்கும் வரை 10 நாட்கள் வரை காத்திருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. 2024 ஆம் ஆண்டில் 24 மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட டிராலி காத்திருப்பு நிகழ்ந்த 48,830 பேரில், 33,413 பேர் முதியவர்கள் என்பது கவலை அளிக்கிறது.

கிழக்கு கென்ட் தேசிய சுகாதார சேவை அறக்கட்டளையில் தான் அதிகபட்சமாக 8,916 காத்திருப்புகள் பதிவாகியுள்ளன.

ராயல் காலேஜ் ஆப் நர்சிங் (RCN) இந்த புள்ளிவிவரங்கள் “வளாக சிகிச்சையின் நெருக்கடியின் மேற்பரப்பை மட்டுமே தொடுகின்றன” என்று கூறியுள்ளது.

படுக்கைகள் பற்றாக்குறையால் நோயாளிகள் மருத்துவமனை தாழ்வாரங்களில் சிகிச்சை பெறும் அவலம் அதிகரித்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்