செய்தி தென் அமெரிக்கா

பெருவின் பிரதமர் ஆல்பர்டோ ஒட்டரோலா பதவி விலகல்

பெரு நாட்டின் பிரதமர் பதவியை வகித்து வந்த ஆல்பர்டோ ஒடரோலா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

இளம்பெண் ஒருவரை சட்டவிரோத வகையில், பொது துறை சார்ந்த பணியில் அமர்த்திய குற்றச்சாட்டை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக குரலெழுப்பின.

இதுபற்றிய ஆடியோ ஒன்றும் வெளிவந்தது. இதனை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை ஆல்பர்டோ அறிவித்து உள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அதிபர் டினா பொலுவார்தேவுடன் பேசிய பின்னரே, பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை நான் எடுத்தேன் என கூறினார்.

அரசியல் எதிரிகளின் அச்சுறுத்தல் தன்னை ஒன்றும் செய்யாது என்றும் கூறினார். பதவி விலகல் முடிவை பற்றி அவர் குறிப்பிடும்போது, அதில் 2 விசயங்கள் உள்ளன.

ஒன்று, மந்திரிசபையை மீண்டும் மாற்றியமைக்க அதிபருக்கு கவலை இல்லாமல் இருக்க வேண்டும் என்பது ஆகும்.

2-வது, அதிபர் அவராகவே தொடர்ந்து அவருடைய வேலையை செய்ய அனுமதிப்பது ஆகும் என கூறியுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content