ஐரோப்பா

பிரான்ஸில் தீடீரென தீப்பிடித்து எரிந்த பயணிகள் பேருந்து – தவிர்க்கப்பட்ட உயிர்ச்சேதம்

பிரான்ஸில் பயணிகள் பேருந்து ஒன்று நடுவழியில் தீடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

சுற்றுவற்ற வீதியில் உள்ள porte de Clignancourt பகுதியில் இச்சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.

பயணிகள் எவருமின்றி தனியே சாரதியுடன் பயணித்த குறித்த பேருந்து நடுவழியில் திடீரென தீப்பிடித்துள்ளது.

பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

RATP நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த பேருந்தினை MAN எனும் நிறுவனம் தயாரித்திருந்தது. இது ஒரு மின்சார பேருந்து எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் தலையிட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

 

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content