இலங்கை செய்தி

புறக்கோட்டையில் ஹாலந்து அருங்காட்சியகத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

புறக்கோட்டை – குமார தெருவில் உள்ள ஹாலந்து அருங்காட்சியகத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இந்த அருங்காட்சியகம் இந்த நாட்களில் புதுப்பிக்கப்பட்டு வருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக ஹாலந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஹாலந்து அருங்காட்சியகம் கி.பி 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு மாடி ஹாலந்து கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளதாக தேசிய அருங்காட்சியகத் துறை தெரிவித்துள்ளது

டச்சு ஆளுநரான தாமஸ் வான்ரி என்பவரால் கட்டப்பட்ட இந்த கட்டிடம் 1977 ஆம் ஆண்டு அருங்காட்சியகமாக நிறுவப்பட்டது.

இந்நாட்டின் கரையோரப் பகுதிகளை டச்சுக்காரர்கள் ஆட்சி செய்த காலம் தொடர்பான சுமார் 3,000 கலைப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக தேசிய அருங்காட்சியகத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content