உலகம் செய்தி

லெபனானில் கடும் நெருக்கடி: 10 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு

லெபனானில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக, பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

தெற்கு லெபனானின் பல பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டதையடுத்து, இந்த நிலைமை உருவாகியுள்ளது.

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஹிஸ்புல்லாவும் தொடர்ந்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தங்குமிடங்கள் நிரம்பி வழிவதால், பல குடும்பங்கள் தற்போது தங்கள் கார்களிலோ அல்லது திறந்த வெளிகளில் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர்.

இந்த நிலைமையில் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிபிசி செய்தியாளர் ஹியூகோ பச்சேகா, இந்த மோதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் பேசியபோது, “எங்கள் வீடு போய்விட்டது” என்ற வேதனையான அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

இந்த மோதல் காரணமாக லெபனானில் மனிதாபிமான நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி