உலகம் செய்தி

லெபனானில் இருந்து இராஜதந்திரிகளை நோர்வே திரும்பப் பெறுகிறது

ஐநா தளத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் லெபனானில் நிலைமை மேலும் அதிகரித்துள்ளது. இப்போது நோர்வே எதிர்வினையாற்றுகிறது.

லெபனானில் இருந்து தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாக நோர்வேயின் வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை காலை அறிவித்தது.

லெபனானின் பாதுகாப்பு நிலைமை ‘மிகவும் பதட்டமானது மற்றும் கணிக்க முடியாதது’ என்று அமைச்சகம் விவரிக்கிறது.

“சமீப நாட்கலாக லெபனானில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது, தலைநகர் பெய்ரூட் மற்றும் லெபனானில் ஐ.நா. படைக்கு எதிராக பல இஸ்ரேலிய தாக்குதல்கள்” என்று அவர்களின் செய்திக்குறிப்பில் எழுதப்பட்டுள்ளது.

மேலும், பெய்ரூட்டில் உள்ள நோர்வே தூதரகம் அருகே குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

பல டென்மார்க் இராணுவ கண்காணிப்பாளர்கள் லெபனானில் உள்ள ஐ.நா. தளத்தில் இருந்த போது, இஸ்ரேலிய தாக்குதலில் அகப்பட்டனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி