ஆஸ்திரேலியா

சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு வரியை மும்மடங்காக்கும் நியூசிலாந்து

நியூசிலாந்து, சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு வரியை கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரிக்கவிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 3) அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து நியூசிலாந்தின் சுற்றுலாத்துறை அதிருப்தி தெரிவித்துள்ளது. வரி உயர்த்தப்படுவது, சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதற்கு இடையூறாக இருக்கும் என்ற அச்சம் சுற்றுலாத் துறையினரிடையே நிலவுகிறது.

வரும் அக்டோபர் மாதம் 01ம் திகதி முதல் அனைத்துலக சுற்றுப்பயண, பாதுகாப்பு, சுற்றுலாக் கட்டணத்தை 35 நியூசிலாந்து டொலரிலிருந்து 100 நியூசிலாந்து டொலருக்கு உயர்த்தப்போவதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மற்ற பிரபல சுற்றுலாத்தலங்களைப் போல் நியூசிலாந்தும் சுற்றுலாப்பயணிகளால் இயற்கைச் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் வருகை தரும் சுற்றுலாப்பயணிகளைக் கையாள அந்நாடு சிரமப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து, 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 35 நியூசிலாந்து டொலராக சுற்றுப்பயண, பாதுகாப்பு, சுற்றுலா வரிக் கட்டணத்தை விதித்தது. ஆனால், அந்தக் கட்டணம் இத்தனை சுற்றுலாப்பயணிகள் தொடர்பான எல்லா செலவுகளுக்கும் போதுமானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டணம் போட்டித்தன்மை மிகுந்த சூழலுக்கு உகந்தது என்றும் நியூசிலாந்து தொடர்ந்து பிரபல சுற்றுலாத்தலமாக விளங்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிடடது.

(Visited 67 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித