இலங்கை

இலங்கையில் தொடரும் மர்மம் – மற்றுமொரு தமிழ் தாய் குழந்தை மாயம்

ஹேவாஹெட்ட, ரஹதுங்கொட, ரிவர்டேல் பகுதியில் தாயும் சிறு குழந்தையும் காணாமல் போயுள்ளனர்.

கடந்த 17 நாட்களாக காணாமல் போயுள்ளவர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் சம்பத் குமார் ஹகுரன்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

22 இரண்டு வயதான வெள்ளையம்மா சுரேந்திரனி ராணி மற்றும் அவரது ஒரு வயது ஏழு மாத மகள் தருஷிகா அபி ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி சுகயீனத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு தனது குழந்தையுடன் சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை.

அன்றைய தினம் பேருந்தில் ரிக்கிலகஸ்கட நகருக்குச் சென்றதாகவும், ஊரில் அவர்களை பார்த்ததாகவும் பலர் தன்னிடம் கூறியதாகவும் கணவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண் மற்றும் குழந்தையை தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்