இலங்கை

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சி : கிரியெல்ல குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) குற்றம் சுமத்தியுள்ளது.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அரசாங்க கொள்கை அறிக்கையில் ஜனாதிபதி தேர்தல் பற்றி குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முன்மொழிய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் முன்வைக்கும் போது புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. புதிய அரசியலமைப்பை உருவாக்க குறைந்தது ஒரு வருடமாவது தேவை என்று அவர்கள் கூறுவார்கள்” என்று எம்.பி கூறினார்.

இதன் மூலம் ஜனாதிபதி தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்