ஆசியா

பிலிப்பீன்சில் குரங்கம்மை: கிளேட் 2 கிருமிவகையால் ஒருவர் பாதிப்பு

பிலிப்பீன்சில் நபர் ஒருவருக்குக் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

அவர் கிளேட் 2 கிருமிவகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தியோடோரோ ஹேர்போசா ஆகஸ்ட் 21ஆம் திகதியன்று தெரிவித்தார்.

அது ஆப்பிரிக்காவில் மிக விரைவாகப் பரவி வரும் மிகக் கடுமையான கிளேட் 1 கிருமிவகை அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.இதுவே பிலிப்பீன்சில் இவ்வாண்டு ஏற்பட்டுள்ள முதல் குரங்கம்மை பாதிப்பு.

நோய்வாய்ப்பட்ட 33 வயது பிலிப்பீன்ஸ் நபர் வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகத் ஹேர்போசா கூறினார்.

ஜூலை 2022ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பிலிப்பின்சில் 10 பேருக்குக் குரங்கம்மை ஏற்பட்டுள்ளது.அவர்கள் அனைவரும் குணமடைந்துவிட்டதாக அமைச்சர் ஹேர்போசா தெரிவித்தார்.

குரங்கம்மை பொதுவாக இலேசான பாதிப்புகளை விளைவிக்கக்கூடியது.

ஆனால் சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்கள் ஆகியோரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்