ஐரோப்பா

லண்டனில் காரை செலுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் : ஆபத்தான நிலையில் ஒருவர் அனுமதி!

லண்டனின் மத்திய பகுதியில் உள்ள நடைபாதையில் இன்று (25.12) கார் ஒன்று செலுத்தப்பட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷாஃப்ட்ஸ்பரி அவென்யூவில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சாலையின் தவறான பக்கத்தில் காரை ஓட்டிச் சென்றமை தொடர்பில் பெருநகர காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தனிமைப்படுத்தப்பட்டது என்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்