இந்தியா செய்தி

மனைவியின் வண்டியில் காதலியை அழைத்துச் சென்றவர் மனைவியிடம் மாட்டிக்கொண்ட சுவாரஸ்யம்

man carrying girl friend caught by his wife

மனைவியின் வண்டியில் காதலியை அழைத்துச் சென்றவர்

ஏப்ரல் 25ஆம் தேதி, திருவனந்தபுரத்தில் தலைக்கவசம் அணியாமல் தன் தோழியுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற ஆடவர் ஒருவரும் பிரச்சினையில் மாட்டிக்கொண்டார்.

காவல்துறை வழக்கில் சிக்கிக்கொண்ட அந்த ஆண் கைது செய்யப்பட்டதாக பிடிஐ செய்தித்தளம் தெரிவித்தது.

அந்த ஆண் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் அவருடைய மனைவிக்குச் சொந்தமானது. எனவே, அந்த நபர் போக்குவரத்து விதிகளை மீறியது குறித்த விவரங்களும் அவரும் அவருடைய காதலியும் மோட்டார்சைக்கிளில் இருந்ததைக் காட்டும் கண்காணிப்புக் கருவியில் பதிவான புகைப்படங்களும் மனைவியின் கைப்பேசிக்குக் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்பட்டன.

குறுந்தகவல் கிடைத்தவுடன் கணவரிடம் அந்த பெண் விசாரித்தார். மோட்டார்சைக்கிளில் கணவருடன் இருந்த பெண் யார் என்பது பற்றி மனைவி மறுபடி மறுபடியும் விசாரித்தார்.

அந்தப் பெண்ணுடன் தமக்கு உறவு இல்லை என்று மறுத்தாலும் அவரது மனைவி அதை நம்பவில்லை.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தம்மிடமும் தங்களது மூன்று வயதுக் குழந்தையிடமும் தம் கணவர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகக் கூறி மே 5ஆம் தேதி காவல்துறையிடம் அந்த மாது புகார் அளித்தார்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அந்த ஆடவர், பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

(Visited 1 times, 1 visits today)

hqxd1

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content