இந்தியா செய்தி

ஹிமாச்சலில் போலந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது

இமாச்சலப் பிரதேசத்தின் மெக்லியோட்கஞ்ச் என்ற இடத்தில் போலந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு நபர் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 376-வது பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாக காங்ராவின் உதவிக் காவல் கண்காணிப்பாளர் ஹிதேஷ் லகன்பால் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அந்த பெண்ணின் மருத்துவ பரிசோதனையில் பலாத்காரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது வாக்குமூலத்தை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு போலீசார் பதிவு செய்தனர்.

தியானப் பயிற்சிக்காகப் பதிவு செய்த அந்தப் பெண், கடந்த மூன்று வாரங்களாக மெக்லியோட்கஞ்சில் தங்கியிருந்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி