இந்தியா

மகாராஷ்ரா – 2 குழந்தைகளைக் கொன்று விட்டு மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவெடுத்த தாய்!

தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ரா மாநிலம், நாசிக்கில் உள்ள கோனார்க் நகரைச் சேர்ந்தவர் அஷ்வினி நிகும்ப்(30). இவருக்கு ஆராத்யா(8), அகஸ்தியா(2) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். அஷ்வினிக்கும், அவரது கணவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று அவரது கணவர் வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளுக்கும் அஷ்வினி விஷம் கொடுத்து கொலை செய்தார். இதன் பின் தான் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து அஸ்வினி கீழே குதித்தார். இதில் தலையில் அடிபட்ட அஸ்வினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

A shadow pandemic of domestic violence: The potential role of job loss ...

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார், விரைந்து வந்து அஸ்வினி நிகும்ப் உடலை மீட்டனர். அவரது வீட்டிற்குச் சென்று பார்த்த போது அவரது இரண்டு குழந்தைகள் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். வீட்டை பொலிஸார் சோதனை செய்த போது, சாவதற்கு முன் அஸ்வினி செல்போனில் பதிவு செய்த வீடியோ இருந்தது.

அதில், தனது கணவர் ஸ்வப்னில் தன்னை துன்புறுத்துவதாகவும், அதனால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தற்கொலை செய்வதாகவும் அஸ்வினி கூறியிருந்தார்.

வேலைக்காக புணே சென்ற அஸ்வினியின் கணவர் ஸ்வப்னிலிடம் பொலிஸார் தொடர்பு கொண்டு பேசினர். அவரிடம் தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content