போலி தொலைபேசி அழைப்பாளரிடம் உரையாடிய இத்தாலியப் பிரதம மந்திரி
இத்தாலியப் பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி, ஒரு ஆப்பிரிக்கத் அரசியல்வாதியாக காட்டிக் கொண்ட ஒரு அழைப்பாளரிடம் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது “தவறாக” அழைக்கப்பட்டதாக மெலோனியின் அலுவலகம் உறுதிப்படுத்திபடுத்தியுள்ளது.
உக்ரைனில் நடந்த போரில் “அதிக சோர்வு” இருப்பதாகவும், “ஒரு வழியைக் கண்டுபிடிப்பது” என்பது குறித்து தனக்கு சில யோசனைகள் இருப்பதாகவும் குறித்த தொலைபேசி அழைப்பில் இத்தாலியப் பிரதம மந்திரி கூறியுள்ளார்.
இத்தாலிய பத்திரிகைகளில் வந்த செய்திகளின்படி, அழைப்பாளர்கள் இரண்டு ரஷ்ய நகைச்சுவை நடிகர்கள், அவர்களில் ஒருவர் தன்னை மெலோனிக்கு “ஒரு ஆப்பிரிக்க அரசியல்வாதி” என்று காட்டினார் என செய்தி வெளியாகியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)





