ஆசியா

லெபனானின் தெற்கு பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – இருவர் பலி !

ஹமாஸ்க்கு எதிராக காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லாபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். அதில் இருந்து சிரியா, ஈராக், லெபனான் நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் மீது அமெரிக்கா டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஏற்கனவே மத்திய கிழக்கு பகுதி இஸ்ரேல்- ஹமாஸ் போரால் பதற்றமாக இருக்கும் நிலையில் தற்போது இந்த டிரோன் தாக்குதல்களால் மேலும் மோசம் அடைந்துள்ளது.

Israeli drone attack kills 2 in Lebanon, one of the deepest hits inside the  country in weeks | PBS NewsHour

இந்த நிலையில்தான் லெபனான் நாட்டின் தெற்கு துறைமுக நகரான சிடோனில் இஸ்ரேல் டிரோன் தாக்குல் நடத்தியுள்ளது. கார் ஒன்றை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டிரோன் தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டும் லெபனானில், இஸ்ரேல் தாக்குதல் மூலம் ஹிஸ்புல்லாவின் முக்கியமான தளபதில் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் ஹாமஸ் அமைப்பின் முக்கிய நபர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content