‘செறிவூட்டப்பட்ட யுரேனியம்’ – ஈரானின் அதிரடி முடிவு! அமெரிக்கா கொதிப்பு!!
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிற்கு அனுப்பும் பேச்சுக்கே இடமில்லை என்று ஈரான் துணை வெளிவிவகார அமைச்சர் Saeed Khatibzadeh திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதேபோல யுரேனிய விவகாரம் குறித்து மேலும் விவாதிக்க ஈரான் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இந்த உறுதியான நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அத்துடன், அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் உள்ளன என ஈரான் துணை வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.





