உலகம் செய்தி

‘செறிவூட்டப்பட்ட யுரேனியம்’ – ஈரானின் அதிரடி முடிவு! அமெரிக்கா கொதிப்பு!!

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிற்கு அனுப்பும் பேச்சுக்கே இடமில்லை என்று ஈரான் துணை வெளிவிவகார அமைச்சர் Saeed Khatibzadeh திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதேபோல யுரேனிய விவகாரம் குறித்து மேலும் விவாதிக்க ஈரான் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் இந்த உறுதியான நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

அத்துடன், அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் உள்ளன என ஈரான் துணை வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி