செய்தி விளையாட்டு

IPL Match 43 – மும்பை அணி மீண்டும் தோல்வி

டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி மெக்கர்க் , ஸ்டப்ஸ், ஷாய் ஹோப் ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் டெல்லி அணி 257 ரன்கள் குவித்தது.

பின்னர் 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. பவர்பிளேயான முதல் ஆறு ஓவரில் மும்பை இந்தியன்ஸ் ரன்கள் குவிக்க திணறியது.

இஷான் கிஷன் 14 பந்தில் 20 ரன்களும், ரோகித் சர்மா 8 பந்தில் 8 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 13 பந்தில் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆறு ஓவரில் 65 ரன்கள் அடிப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

என்றபோதிலும் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் கொடுக்க முடியவில்லை. ஹர்திக் பாண்ட்யா 24 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வதேரா 2 பந்தில் 4 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

6-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஒரு கட்டத்தில் மும்பை அணி வெற்றி பெறும் என்ற நிலைக்கு வந்தது.

அந்த நேரத்தில்தான் 18-வது ஓவரின் 4-வது பந்தில் டிம் டேவிட் 17 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. திலக் வர்மா எதிர்கொண்டார். முகேஷ் குமார் இந்த ஓவரை வீசினார்.

கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.

(Visited 2 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content