இந்தியா

இந்தியா – ரீல்ஸ் மோகத்தால் பறிபோன இளைஞரின் உயிர்… 150 அடி உயரத்திலிருந்து ஏரிக்குள் குதித்ததால் விபரீதம்!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்றாக 150 அடி உயரத்தில் இருந்து ஆழமான ஏரியில் குதித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த தினேஷ் மீனா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் கல்குவாரியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக நேற்று சென்றுள்ளார். அப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் எடுக்க தினேஷ் மீனா முடிவு செய்தார். இதற்காக 150 அடி உயர கல்குவாரியில் இருந்து ஏரிக்குள் தினேஷ் குதித்துள்ளார். இதை அவரது நண்பர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

ஜாரக்கண்ட் மாநிலத்தில் ஏரியில் குதித்து உயிரிழந்த தஜிப்.

ஏரியில் குதித்த தினேஷ் நீண்ட நேரமாகியும், வெளியே வராததால், அவரது நண்பர்கள் ஏரியில் குதித்து தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் டைவர்ஸ் விரைந்து வந்து மூன்று மணி நேரமாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

ஆனால், உயிரற்ற மீனாவின் உடலைத்தான் அவர்களால் மீட்க முடிந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எம்.பி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content