இலங்கை செய்தி

நீதிமன்றங்களில், இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் உள்ளன

இந்நாட்டு நீதிமன்றங்களில் உள்ள சுமார் 20,075 வழக்குகள் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் என நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை 31ஆம் திகதி வரை, உயர் நீதிமன்றங்களில் 7,495 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் 12,580 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 2,751 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 2021 இல் 11,187 முறைப்பாடுகளும், 2022 இல் 10,497 முறைப்பாடுகளும், 2023 இல் 9436 முறைப்பாடுகளும், 2024 ஏப்ரல் 30, வரை 2,571 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க வழங்கிய பதில்களை வழங்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சிறுவர் துஷ்பிரயோகம் காரணமாக 6587 சிறுமிகளும் 1694 ஆண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content