ஐரோப்பா

மரணங்களுக்கு வருந்துகிறேன் – பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வெளியிட்ட தகவல்

COVID-19 பெருந்தொற்றுக் காலத்தின்போது நேர்ந்த மரணங்களுக்கு வருந்துகிறேன் என பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின்போது நேர்ந்த மரணங்களுக்குத் தாம் மிகவும் வருந்துவதாகக் கூறியிருக்கிறார். கொரோனா தொற்றுச் சூழலை நாடு கையாண்ட விதம் குறித்த அதிகாரபூர்வ விசாரணையில் அவர் சாட்சியம் அளித்தார்.

விசாரணையின் தொடக்கத்தில் அவர், சாட்சியம் அளிப்பதில் மகிழ்ச்சிகொள்வதாகவும் அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தாரும் எதிர்கொண்ட வேதனைக்கு வருந்துவதாகவும் தெரிவித்தார்.

ஜொன்சன் 2 நாள்களுக்கு விசாரிக்கப்படுவார். உலகில் கோவிட் நோயால் ஆக அதிக மரணங்களை எதிர்நோக்கிய நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும்.

அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விசாரணை நடைபெறுகிறது. 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை அவர் பிரித்தானியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்