ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சிட்னி கரையோர பகுதியை தாக்கிய பேரலைகள் : அச்சத்தில் வெளியேற்றப்பட்ட மக்கள்!

ஆஸ்திரேலியாவின் – சிட்னி நகரத்தில் மிகப் பெரிய அலை கரையோர பகுதிகளை தாக்கியதை தொடர்ந்து கடற்கரையோர சொத்துக்கள் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவை செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ எட்மண்ட்ஸின் கூற்றுப்படி, நள்ளிரவில் சிட்னியின் தெற்கில் உள்ள தாவரவியல் விரிகுடாவில் பாரிய அலைகள் கரையோர பகுதிகளை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கரையோர பகுதியில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிட்னியின் முதன்மையான Bondi  கடற்கரை பகுதியில் பாரிய அலைகள் எழுந்ததாகவும், இதனால் வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னிக்கு தெற்கே உள்ள இல்லவர்ரா பகுதியிலிருந்து சிட்னிக்கு வடக்கே உள்ள ஹண்டர் பகுதி வரை கடலோர அரிப்பு மற்றும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான அலைகள் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித