இலங்கை

இலங்கையில் முதல் முறையாக 22 கரட் தங்கத்தின் விலை 300000 தொட்டது!

  • October 8, 2025
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்ததன் காரணமாக, உள்ளூர் சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண்டின் விலை இன்று (08) வரலாற்றில் முதல் முறையாக  300,000 ஐ தாண்டியுள்ளது. உலக சந்தையில் ஏற்பட்ட மாற்றமே இந்த அதிகரிப்பிற்கு காரணமாகும். இதற்கமைய நாட்டில் நேற்று  290,500 ரூபாயாக  இருந்த 22 கரட் தங்கத்தின் விலை இன்று காலை  296,000 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இன்று மூன்று முறை தங்கத்தின் விலை அதிகரித்தது, தற்போது வரை கொழும்பு ஹெட்டிவீதி […]

ஐரோப்பா

லண்டனில் 8000 சிறுவர்களின் தரவுகளை திருடிய இரு இளைஞர்கள் கைது!

  • October 8, 2025
  • 0 Comments

லண்டனில் உள்ள பாலர் பாடசாலை சங்கிலியில் சைபர் தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணினியை தவறாக பயன்படுத்துதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அவர்கள் இருவரும் எதிர்நோக்கியுள்ளனர். ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் பிஷப்ஸ் ஸ்டோர்ட்ஃபோர்டில் (Bishop’s Stortford, Hertfordshire) உள்ள குடியிருப்புகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் தற்போது விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாலர் பாடசாலையில் இருந்து சுமார் 8,000 […]

இலங்கை

இலங்கையில் விந்தணு வங்கியால் ஏற்பட்ட நன்மை – 10 பெண்கள் கர்ப்பம்

  • October 8, 2025
  • 0 Comments

கொழும்பில் உள்ள காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கியால் பாரிய நன்மை ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் அஜித் குமார தன்தநாராயன தெரிவித்துள்ளார். இதன் மூலம் 10 பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த விந்தணு வங்கி நிறுவப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் ஆகின்ற நிலையில் நன்மை ஏற்பட்டுள்ளது. இந்த வங்கியில் தானம் செய்பவர்களின் பல நோய்களுக்கான முறையான மருத்துவ பரிசோதனைகளை நடத்திய பிறகு, அவர்களின் விந்தணு வங்கியில் சேமிப்பில் வைக்கப்படுவதாக மருத்துவமனை […]

பொழுதுபோக்கு

அரசனில் இணையும் சூப்பர் ஸ்டார்கள்

  • October 8, 2025
  • 0 Comments

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் அரசன் திரைப்படத்தில் பல நடிகர்கள் இணைந்துள்ளனர். இப்படத்தில் நடிகர் அமீரின் ராஜன் கதாபாத்திரம் இருக்கிறதாம். அதனால், அமீர் நடிக்கிறார். நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப்பிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கிச்சா சுதீப் ஒப்புக்கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்புகான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அரசன் படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். அனிருத்தின் பிறந்த நாளான 16ஆம் திகதி இப்படத்தின் ப்ரோமோ வெளியாகும் […]

ஆசியா

சிங்கப்பூரில் மற்றுமொரு தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

  • October 8, 2025
  • 0 Comments

மலேசிய நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38) என்ற நபருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் 51.84 கிராம் ஹெராயின் போதைப்பொருளைச் சிங்கப்பூருக்குக் கடத்தியதாக  குற்றம் சாட்டப்பட்ட அவர்  வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் திகதி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் பன்னீர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

இந்தியாவிற்கான விசா விதிகளை தளர்த்தும் எண்ணம் இல்லை – பிரித்தானிய பிரதமர்!

  • October 8, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கான விசா விதிகளை இங்கிலாந்து தளர்த்தாது என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட குழுவினருடன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாமரிடம், அமெரிக்கா  H-1B  விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதனை பிரித்தானியா சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த அவர், இங்கிலாந்து பொருளாதாரத்தை வளர்க்க உதவும் வகையில் உலகம் முழுவதிலுமிருந்து “சிறந்த திறமையாளர்களை” ஈர்க்க இங்கிலாந்து விரும்புவதாக கூறியுள்ளார்.  இந்தியர்களுக்கான விசா விதிகளை தளர்த்தும் எண்ணம் இல்லை எனக் […]

இலங்கை செய்தி

முத்துநகர் காணிகளை மக்களிடம் கையளிக்க வேண்டும் – கலீலுர் ரஹ்மான்!

  • October 8, 2025
  • 0 Comments

மக்கள் தந்த ஆணைக்கு மதிப்பளித்து முத்து நகர் காணிகளை விவசாயிகளுக்கே அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும் என  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் முத்து நகர் காணி மீட்பு போராட்டகாரர்களுக்கு ஆதரவளித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  1972ம் ஆண்டு காலப்பகுதியில் முத்து நகர் காணிகள் அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டது. வேறு பிரதேசங்களில் […]

இலங்கை

இலங்கையில் தனியார் பேருந்துகளில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணங்களைச் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம்  30 ஆம் திகதி  முதல் இந்த திட்டம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கருத்து வெளியிட்ட  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்கான ஒரு அமைப்பை உருவாக்க தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். […]

பொழுதுபோக்கு

இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு

  • October 8, 2025
  • 0 Comments

கவின் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது படத்தின் பெயர் போஸ்டராக இருக்கலாம், நயன்தாரா அல்லது கவினின் கதாப்பாத்திரமாக இருக்கலாம், அல்லது வெளியீட்டுத் திகதியாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின், நயன்தாரா இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்கா

மாலியில் எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடு – பகல், இரவாக வரிசையில் நிற்கும் மக்கள்!

  • October 8, 2025
  • 0 Comments

மாலியில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினை நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் பலரும் இரவு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின்  (JNIM) இன் போராளிகள் மாலிக்கு வரும் எரிபொருள் தாங்கிய வண்டிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாரியளவு முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.  பமாகோவில் (Bamako) உள்ள வங்கி ஊழியரான அமடோ பெர்த்தே என்ற நபர் […]

error: Content is protected !!