இலங்கை செய்தி

இலங்கையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது – உலக வங்கி!

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான பொதுத்துறை ஊழியர்கள் இருப்பதாகவும், ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு குறைந்த சம்பளம் மட்டுமே கிடைப்பதாகவும் உலக வங்கி கூறியுள்ளது. உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கியோவோக் சாக்சியன் தலைமையிலான  குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அரசாங்க நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷா டி சில்வா மற்றும் பிற குழு உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இந்தப் பிரச்சினைக் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொதுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கையை சரிசெய்து ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டிய […]

பொழுதுபோக்கு

உலகளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற “காந்தாரா” – படக்குழு வெளியிட்ட அறிக்கை

  • October 8, 2025
  • 0 Comments

காந்தாரா தெய்வ கதாபாத்திரங்களின் மகத்துவத்தை அவமதிக்காதீர்கள் என்று படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. காந்தாரா திரைப்படம் வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், காந்தாரா திரைப்படத்தின் முன்கதையை மையமாக வைத்து, ‘காந்தாரா சாப்டர் – 1’ திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டியே இப்பத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார். இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், காந்தாரா தெய்வ கதாபாத்திரங்களின் மகத்துவத்தை மிமிக்ரி, ஒப்பனை செய்து கெடுக்காதீர் என்று படக்குழு வேண்டுகோள் […]

இலங்கை

இலங்கையில் முட்டை விலையில் ஏற்பட்ட மாற்றம்

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு வெள்ளை முட்டை 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு முட்டை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக முட்டையின் விலை சிறிதளவு அதிகரித்திருந்த நிலையில் மீண்டும் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

பொழுதுபோக்கு

துல்கர் சல்மானின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

  • October 8, 2025
  • 0 Comments

நடிகர் துல்கர் சல்மானின் சென்னையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் கிரீன்வேஸ் சாலை – அபிராமிபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டிற்கு 2 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துணை இராணுவப் பாதுகாப்புடன் பலத்த சோதனை நடைபெற்று வருகிறது. அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் உயர் ரக கார்களை இறக்குமதி செய்யும் முறைகேடுகளைக் கண்டறிய நாடு முழுவதும் ‘ஆபரேஷன் […]

வாழ்வியல்

ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கும் மனச்சோர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • October 8, 2025
  • 0 Comments

ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவில் மனச்சோர்வு ஏற்படுவதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நிபுணர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஆண்களை விட பெண்களின் மரபணுவில் மனச்சோர்வை ஏற்படுத்தும் பங்கு இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 2 லட்சம் பேரின் மரபணுவை அடிப்படையாகக் கொண்டு, குயின்ஸ்லாந்தின் QIMR பெர்கோபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. இதில், இருபாலினருக்கும் பொதுவான 7,000 மரபணு மாற்றங்களும், பெண்களை மட்டும் பாதிக்கும் 6,000 […]

உலகம்

இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்ட காசாவை மீட்க 25 ஆண்டுகள் ஆகலாம்

  • October 8, 2025
  • 0 Comments

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களால் நிர்மூலமாகியுள்ள காசவை மீட்க சுமார் 25 வருடங்கள் வரை செல்லலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. போர் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகளும், அதன் விவசாய நிலங்களின் வளத்தை மீட்டெடுக்க 25 ஆண்டுகளும் தேவைப்படலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு இடையே போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவ்வாறான நிலையில் ஐக்கிய […]

உலகம் செய்தி

உச்சம் தொட்ட தங்கத்தின் புதிய விலை – ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலர்

  • October 8, 2025
  • 0 Comments

உலக சந்தையின் வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. சமகாலத்தில் அரசியல் செயற்பாடு, உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலைமை காரணமாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியமையினால் சடுதியாக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பங்கு சந்தைகளில் தொடர்ந்து காணப்படும் நிச்சயமற்ற தன்மை, பணவீக்கம், வட்டிவீதங்களின் மாற்றங்கள் உள்ளிட்டவை தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன. பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளமையினால் […]

விளையாட்டு

ICC மகளிர் உலகக் கோப்பை – புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி

  • October 8, 2025
  • 0 Comments

ICC மகளிர் உலகக் கோப்பையின் மற்றொரு முக்கியமான போட்டி நேற்று நடைபெற்றது. அதற்கமைய, புள்ளிப் பட்டியலில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பங்களாதேஷ் மகளிர் அணிக்கும் இங்கிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி அடித்த 178 ரன்களைத் துரத்திய இங்கிலாந்து அணி, 23 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இதன் விளைவாக, புள்ளிகள் அட்டவணை […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

வட்ஸ்அப் செயலியில் பல புதிய அம்சங்கள் அறிமுகம் – பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

  • October 8, 2025
  • 0 Comments

உலகம் முழுவதும் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்ட வட்ஸ்அப் செயலியில் பல புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, மெட்டா நிறுவனம் புதிய ஏஐ அம்சங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய அப்டேட்களில், செட் தீம்களை ஏஐ மூலம் தனிப்பயனாக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் செயலியில் இருந்தபடியே புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் பின்னணியை (Background) மாற்றும் வசதிகள் அடங்கும். இந்த அம்சங்கள் விரைவில் உலகளவில் அறிமுகமாகவுள்ளன என மெட்டா தெரிவித்துள்ளது. இந்தியாவில் ‘அரட்டை’ போன்ற மெய்செய்தி செயலிகள் […]

இலங்கை

இலங்கையில் சீரற்ற காலநிலை – சுகாதாரப் பிரிவினர் விடுத்த எச்சரிக்கை

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெங்கு நோய் வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நாட்டில் 39,401 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டெங்குவால் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என நிபுணர் தெரிவித்தார். ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 431 […]

error: Content is protected !!