ஐரோப்பா

பிரான்ஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியக கொள்ளை – இருவர் கைது!

  • October 26, 2025
  • 0 Comments

பாரிஸில் உள்ள லூவ்ரே (Louvre)  அருங்காட்சியகத்தில் இருந்து விலைமதிப்பற்ற நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. லீ பாரிசியன் (Le Parisien) செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவலின்படி, பாரிஸின் புறநகர்ப் பகுதியான சீன்-செயிண்ட்-டெனிஸைச் (Seine-Saint-Denis) சேர்ந்த ஒருவரும் மற்றயவர் சார்லஸ் டி கோல் (Charles de Gaulle) விமான நிலையத்தில் வைத்தும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸில் அமைந்துள்ள லூவர் (Louvre) அருக்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருடர்கள்  102 மில்லியன் டொலர் […]

உலகம்

அமெரிக்கா-மலேசியா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

  • October 26, 2025
  • 0 Comments

அமெரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கைகெழுத்தாகியுள்ளது. அமெரிக்காவுக்கு அரிய கனிமங்களை ஏற்றுமதி செய்ய இந்த ஒப்பந்தம் வகை செய்யும். 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோலாலம்பூர் வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக வர்த்தக ஒப்பந்தத்தில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன்(Anwar Ibragi) அவர் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தில் அன்வார் இப்ராகிமின் நிர்வாகம் மேற்கொண்ட பல சலுகைககள் உள்ளடங்கியிருக்கின்றன. அவற்றில் அமெரிக்காவுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்வதும் அடங்கும். […]

உலகம் செய்தி

கனடா மீது கூடுதலாக வரி விதித்த ட்ரம்ப்!

  • October 26, 2025
  • 0 Comments

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதன்படி, டொனால்ட் டிரம்ப் தற்போது செலுத்தும் வரிகளுக்கு கூடுதலாக கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரியை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனின் உரையை சிதைக்கும் வரி விளம்பரத்தை கனடா உருவாக்கியதை அடுத்து அந்நாட்டுடான வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தற்போதைய வரி விதிப்புகளை நடைமுறைப்படுத்தியுள்ளார். எவ்வாறாயினும் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக […]

இலங்கை

லசந்த விக்ரமசேகர கொலை விவகாரம் – பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை!

  • October 26, 2025
  • 0 Comments

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரை கைது செய்ய இலங்கை காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஒன்று,  1.2 மில்லியன் ரூபாய்  ரொக்கம், ஹெராயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (“ஐஸ்”) மற்றும் போதைப்பொருள் நுகர்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும்  காவல்துறையினர் […]

இலங்கை செய்தி

டுபாயில் 250 கிராம் 24 காரட் தங்கப் பட்டையை வென்ற இலங்கையர்!

  • October 26, 2025
  • 0 Comments

டுபாய் – அபுதாபியில் பிரபலமான லோட்டரி டிக்கெட்டாக அறியப்படும் பிக் டிக்கெட்டில் (Big Ticket) இலங்கையர் ஒருவர் தங்கம் வென்றுள்ளார். 63 வயதான வங்கியாளர் முகமது நலீம் பல வருட முயற்சிக்கு பிறகு 173160 என்ற டிக்கெட் எண்ணிற்கு  250 கிராம் 24 காரட் தங்கப் பட்டையை வென்றுள்ளார். அவர் அங்கு ஏறக்குயை 20 வருடங்களாக வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நான் அதிர்ச்சியில் இருந்தேன். பல வருடங்களுக்குப் பிறகு, […]

இலங்கை

மருமகனுடன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற ஆசிரியை கைது!

  • October 26, 2025
  • 0 Comments

தனது மருமகனுடன் இணைந்து ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் 67 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் மருமகனும் கம்பளை பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். கம்பளை, உலப்பனை பகுதியிலுள்ள இவர்களது வீடு நேற்று சோதனைக்குட்படுத்தப்பட்டபோது 200 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மருமகன் ஆட்டோ சாரதியெனவும், இவர்கள் நாவலப்பிட்டிய, கம்பளை உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவருகின்றது. […]

இலங்கை

வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை – பெண்ணொருவர் உட்பட மூவர் கைது!

  • October 26, 2025
  • 0 Comments

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளாலேயே கெக்கிராப பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது. வெலிகம பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபைக்குள் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே […]

இலங்கை

ஜனாதிபதி அநுர தலைமையில் விசேட அமைச்சரவை மற்றும் சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம்

  • October 26, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் எதிர்வரும் 07 ஆம் திகதி காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நவம்பர் 7 ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது. அதற்கு முன்னதாகவே அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி, பாதீட்டு உரைக்கு அனுமதி பெறுவதற்காக விசேட அமைச்சரவைக் கூட்டம் நடக்கவுள்ளது. ஜனாதிபதியின் வரவு- செலவுத் திட்ட உரை 2ஆம் வாசிப்பாக கருதப்படும். […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

பேஸ்புக், வட்ஸ்அப்பை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் மெட்டா

  • October 26, 2025
  • 0 Comments

மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் பேஸ்புக் (Facebook) தொடர்பாகப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பயனர்கள் தங்கள் சுயவிவரத்தை (Profile) பேஸ்புக் சுயவிவரத்துடன் நேரடியாக இணைக்கும் புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி, சமூக ஊடக இணைப்பை எளிதாக்கும் ஒரு முயற்சியாகும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS பீட்டா பதிப்புகளில் (2.25.29.16) இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம், பயனர்கள் […]

உலகம்

நியூசிலாந்தில் 100 காந்தங்களை விழுங்கிய சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்

  • October 26, 2025
  • 0 Comments

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த காந்தங்களை விழுங்கிய 13 வயதுச் சிறுவனுக்கு அவசர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இணையம் மூலம் வாங்கிய 100 சக்திவாய்ந்த காந்தங்களை சிறுவன் விழுங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார். இதன்போது X-ray பரிசோதனையில், காந்தங்கள் குடலில் ஒட்டிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடி அறுவைச் சிகிச்சையின் பின்னர் எட்டு நாள் சிகிச்சைக்குப் பின் சிறுவன் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்றார் என்று தெரிவிக்கப்படுகிறது. சிறுவன் விழுங்கிய இந்த […]

error: Content is protected !!