இலங்கை செய்தி

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் மாபியாக்களுக்கு வலை!

  • October 26, 2025
  • 0 Comments

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் பிரதான வியாபாரிகள் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார் என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், பல்வேறு நாடுகளில் தலைமறைவாகி இருந்து – குழக்கள் ஊடாகவே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர் என மேற்படி செய்தியில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், ஆர்ஜென்டினா, ஈரான், இந்தியா போன்ற நாடுகளில் இருந்தும் போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு […]

இலங்கை

இலங்கையில் ஆளுங்கட்சி மீது அரசியல் போர்: வருகிறது மற்றுமொரு பிரேரணை!

  • October 26, 2025
  • 0 Comments

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்த வலியுறுத்தியுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடமே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக சுட்டிக்காட்டி, உரிய பாதுகாப்புகோரி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதி இருந்தார். எனினும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்த விடயத்தை […]

உலகம்

ஆசியச் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த ட்ரம்ப் – கோலாலம்பூரில் அன்வர் இப்ராஹிம் வரவேற்பு

  • October 26, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இன்று தனது ஆசிய சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். அதற்கமைய, முதல் கட்டமாக மலேசியா சென்றடைந்துள்ளார். கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim) அமெரிக்க ஜனாதிபதியை அன்புடன் வரவேற்றார். அமெரிக்க ஜனாதிபதி மலேசியாவில் தங்கியிருக்கும் போது தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (ASEAN) உச்சிமாநாட்டிலும் கலந்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டது. ட்ரம்ப் மலேசியா வருவதற்கான முக்கிய மையங்களில் ஒன்றாக, கடந்த ஜூலை மாதம் […]

இலங்கை

சீன BYD வாகனங்களை மீளப் பெற நடவடிக்கை – இலங்கையில் பாதிப்பில்லை

  • October 26, 2025
  • 0 Comments

உலகளாவிய ரீதியில் வாகனங்களை மீளப் பெறும் நடவடிக்கையை சீன மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான BYD மேற்கொண்டுள்ளது. எனினும் தமது நிறுவனத்தால் அண்மையில் அறிவிக்கப்பட்ட உலகளாவிய ரீதியிலான வாகனங்களை மீளப் பெறும் நடவடிக்கை இலங்கைக்குப் பொருந்தாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. பாதுகாப்பு மற்றும் தயாரிப்புத் தரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக, சுமார் 115,000 BYD டாங் (Tang) மற்றும் யுவான் புரோ (Yuan Pro) வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக அந்த நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது. எனினும், இந்த மீளப் பெறும் […]

உலகம்

புற்றுநோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கை – ஆயுட்காலத்தை அதிகரிக்கும் கோவிட் mRNA தடுப்பூசிகள்

  • October 26, 2025
  • 0 Comments

உலகளவில் பயன்படுத்தப்படும் பைசர் மற்றும் மொடர்னா (Moderna) கோவிட் தடுப்பூசிகளில் உள்ள  mRNA தொழில்நுட்பம், சில புற்றுநோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஹூஸ்டனில் உள்ள எம்.டி ஆண்டர்சன் புற்றுநோய் மையம் (MD Anderson Cancer Center in Houston) மற்றும் புளோரிடா பல்கலைக்கழக (University of Florida) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இது தொடர்பில் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில், இந்தத் தடுப்பூசிகளைப் பெற்ற புற்றுநோய் நோயாளிகளின் ஆயுட்காலம் கணிசமாக அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல் அல்லது தோல் புற்றுநோய்க்கான […]

இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தும் காய்ச்சல் – 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம்

  • October 26, 2025
  • 0 Comments

இலங்கையில் தற்போது பெய்து வரும் கனமழைக் காரணமாக டெங்கு, எலிக் காய்ச்சலுடன் இன்ப்ளூயன்ஸா காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என குழந்தை நல மருத்துவர் ஹெரிஸ் பத்திரகே வலியுறுத்தியுள்ளார். “குளிர் காலநிலை காரணமாக இன்ப்ளூயன்ஸாவின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். இது நிமோனியாவாக மாறுவதற்கான அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சிறுவர்கள் இந்த குளிர் காலத்தை எதிர்கொள்ளும் வகையில், அவர்களின் வாழ்க்கை […]

இலங்கை

இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற படகை வழங்கிய ஆனந்தன் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்

  • October 26, 2025
  • 0 Comments

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகை வழங்கிய ஆனந்தன், நீண்ட காலமாக இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கேரள கஞ்சாவை கடத்தி வந்த ஒரு கடத்தல்காரர் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, சந்தேக நபர் நேற்று கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவால் 10 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் எனவும் தென்னந்தோப்பில் உள்ள ஒரு நிலத்தடி பதுங்கு குழியில் கஞ்சா இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். சந்தேக […]

உலகம்

ஜப்பானில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் – விசா கட்டணங்களை அதிகரிக்கப் பரிசீலனை

  • October 26, 2025
  • 0 Comments

ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்த, விசா கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. 2026 நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டு விசா கட்டணங்களை உயர்த்துவது குறித்துப் பரிசீலித்து வருவதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய விசா கட்டணங்கள் சர்வதேச தரத்தை விடக் குறைவாக உள்ளன. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாகக் கட்டணங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா (Takeshi Iwaya) தெரிவித்துள்ளார். தற்போது, ஜப்பானுக்கான ஒற்றை நுழைவு […]

ஐரோப்பா செய்தி

குற்றச் செய்திகளில் வெளிநாட்டவர்களை மிகைப்படுத்திக் காட்டும் ஜெர்மன் ஊடகங்கள்

  • October 26, 2025
  • 0 Comments

  ஜெர்மனியில், வன்முறைக் குற்றச் செய்திகளில் வெளிநாட்டவர்கள் அதிக அளவில் ஈடுபடுவது போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் உருவாக்குகின்றன. ஆனால், ஊடகவியலாளர் பேராசிரியர் தாமஸ் ஹெஸ்டர்மேன் நடத்திய ஆய்வு, உண்மையில் அவ்வாறு இல்லை என்பதைக் காட்டுகிறது. 2024ஆம் ஆண்டில், தொலைக்காட்சி குற்ற அறிக்கைகளில் நான்கில் ஒரு பகுதி, சந்தேக நபரின் தேசியம் அல்லது பிறப்பிடத்தைக் குறிப்பிட்டுள்ளன. அவற்றில் 94.6 சதவீதத்துக்கும் மேற்பட்டவற்றில், சந்தேக நபர் ஜெர்மன் அல்லாதவர். இருப்பினும், பெடரல் குற்றவியல் காவல் அலுவலகத்தின் (BKA) தரவுகளின்படி, […]

உலகம் செய்தி

வட கொரியா மற்றும் சீனாவின் எல்லை பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • October 25, 2025
  • 0 Comments

வட கொரியாவின் எல்லைக்கு அருகில், வடகிழக்கு சீனாவின் ஜிலின் (Jilin) மாகாணத்தின் ஹன்சுன் (Hanshun) நகரில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து, உயிரிழப்புகள் அல்லது பொருள் சேதம் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதுவும் இல்லை என்று சீன பூகம்ப வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியில் நிலநடுக்கங்கள் அரிதானவை அல்ல, ஏனெனில் முந்தைய ஆண்டுகளில் இதேபோன்ற நிலநடுக்கங்கள் ஜிலின் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பசிபிக் நெருப்பு […]

error: Content is protected !!