ஐரோப்பா செய்தி

ஜெர்மனியின் பல இடங்களில் இரத்தத்தினால் வரையப்பட்ட குறியீடு – மர்ம நபர்களை தேடும் காவல்துறை!

  • November 6, 2025
  • 0 Comments

ஜெர்மனியின் (German) ஹனாவ் (Hanau) நகரின் பல பகுதிகளில் இரத்தினால் எழுதப்பட்ட ஸ்வஸ்திகா (swastikas)  குறியீடு (பிள்ளையார் சுழி) பொறிக்கப்பட்டுள்ளது. பொது இடங்கள் மற்றும் கார்கள் என 50 இற்கும் மேற்பட்ட இடங்களில் மேற்படி குறியீடு பொறிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது அந்நாட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வஸ்திகா  குறியீடு மனித இரத்தினால் வரையப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன. சம்பவங்களின் பின்னணி முற்றிலும் தெளிவாக இல்லை என்றும், […]

உலகம் செய்தி

DV லாட்டரி விசா : அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிவிப்பு!

  • November 6, 2025
  • 0 Comments

அமெரிக்காவின்  DV லாட்டரி விசாவிற்கான பதிவுக்காலம் இன்னும் தொடங்கப்படவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது. மோசடியாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்வதால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ DV-2027 பதிவு திகதிகள் மற்றும் செயல்முறைக்கான ஏதேனும் புதுப்பிப்புகள் கிடைக்கும்போது மட்டுமே அமெரிக்க வெளியுறவுத்துறையால் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரிபார்க்கப்பட்ட தகவலுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான dvprogram.state.gov அல்லது https://dvprogram.state.gov ஐ மட்டுமே நம்பியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.  

இலங்கை செய்தி

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட கணவர் – NPP அரசின் பிரதேச சபை உறுப்பினரான மனைவி பதவி விலகல்!

  • November 6, 2025
  • 0 Comments

கணவன் போதைப்பொருளுடன் கைதாகியுள்ள நிலையில், அவரது மனைவியான தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகியுள்ளார். அநுராதபுரம், எப்பாவல பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றார் என பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைய குறித்த அதிபருக்கு சொந்தமான எப்பாவல பகுதியிலுள்ள ஹோட்டலொன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரான அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மகனும் போதைப்பொருளுடன் கைது […]

இலங்கை

ஜனநாயக விரோத செயலை செய்யும் அரசாங்கம் – மஹிந்த தேசப்பிரிய!

  • November 6, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் அதன் நிர்வாகத்தை ஆளுநர் ஊடாக முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ மாகாணசபைத் தேர்தல் ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டதால், அதனை நடத்தாமல் ஆளுநர்கள் ஊடாக நிர்வாகத்தை முன்னெடுப்பது சட்டவிரோதமாகும். மக்கள் சபையை நிர்வகிக்க வேண்டுமெனில் மக்கள் வாக்களிப்புமூலம் தெரிவுசெய்யப்பட்ட […]

பொழுதுபோக்கு

விஜய்யின் “ஜனநாயகன்” படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ் நியுஸ்..

  • November 6, 2025
  • 0 Comments

தளபதி விஜய் நடிக்கும் இறுதி படமான ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் நாளை மறுதினம் வெளியாகவுள்ளது. இதை தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதேவேளை, பாடலின் ப்ரொமோ வீடியோ நாளை வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் தொழிலாளர், மாணவர் விசாவிற்கான கட்டுப்பாடுகளால் ஏற்படும் பேரிழப்பு!

  • November 6, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் தொழிற்கட்சியினரால் முன்மொழியப்பட்ட குடியேற்ற கட்டுப்பாடுகளால், இங்கிலாந்து பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படும் என்று உள்துறை அலுவலக மதிப்பீடு சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதாரமானது  £4.4 பில்லியன் வரை  பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கான படிப்புக்குப் பிந்தைய தங்குதலை இரண்டு ஆண்டுகளில் இருந்து 18 மாதங்களாகக் குறைத்தல் மற்றும் திறமையான தொழிலாளர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவையை அதிகரித்தல் ஆகியவை தொழிற்கட்சியனரால் முன்மொழியப்பட்ட குடியேற்ற கொள்கைகளில் முக்கியமானவையாகும். இந்த மாற்றங்கள் ஆண்டுதோறும் 11,000 முதல் 15,000 சர்வதேச மாணவர்களைத் […]

ஐரோப்பா செய்தி

UKவில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட மோசடிக் குற்றவாளி மீண்டும் சரணடைந்தார்!

  • November 6, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட மோசடி குற்றவாளியான வில்லியம் ஸ்மித் (William Smith) தானாக முன்வந்து காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார். அவர் தற்போது காவலில் இருப்பதாக சர்ரே காவல்துறை (Surrey Police) தெரிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்திய லாமி (Lammy) தவறான விடுதலைகளில் உள்ள “ஸ்பைக்” (spike)  ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளார். “நாங்கள் சிறை அமைப்புகளை நவீனமயமாக்குகிறோம். பிழைகளைக் குறைக்க  டிஜிட்டல் கருவிகளால் மாற்றுகிறோம்,” என்று அவர் கூறுகிறார். மேலும் முன்னதாக விடுதலை செய்யப்பட்ட பிரஹிம் கடூர்-செரிப்பை (Brahim […]

பொழுதுபோக்கு

கணவருக்காக களத்தில் இறங்கிய ஸ்ருதி – வெளியிட்ட ஆதாரங்கள்! நடக்கப்போவது என்ன?

  • November 6, 2025
  • 0 Comments

மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிறிஸ்சில்டா விவகாரம் தற்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பலி போட்டு வருகின்றார்கள். இதுவரை மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிறிஸ்சில்டா மட்டும் தான் சமூகவலைத் தளங்களில் சண்டையிட்டு வந்தனர். ஆனால் தற்போது மாதம்பட்டி ரங்கராஜின் முதன் மனைவி ஸ்ருதியும் களத்தில் இறங்கிவிட்டார். இவர் இன்று தனது இன்ஸ்டாகிராமில் , நான் கடந்த மார்ச் மாதம் எங்களின் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டபோது ஏப்ரல் […]

இலங்கை

இரத்தினபுரியின் பல பகுதிகளில் வெள்ளம் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  • November 6, 2025
  • 0 Comments

இரத்தினபுரியில் 12 மணித்தியாலமாக தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. குருவிட்ட, எலபாத மற்றும் கிரியெல்ல உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இப்பகுதியில் உள்ள பல சாலைகள் மற்றும் ரத்தினச் சுரங்கங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மழை மற்றும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், மக்களின் வாழ்வதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை

ஹெரோயினுடன் சிக்கிய அதிபரிடம் பலகோணங்களில் விசாரணை! 

  • November 6, 2025
  • 0 Comments

ஹெரொயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட அரச பாடசாலையொன்றின் அதிபருக்கு, டுபாயில் இருந்தே குறித்த போதைப்பொருள் அனுப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. எப்பாவல பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றார் என பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைய குறித்த அதிபருக்கு சொந்தமான எப்பாவல பகுதியிலுள்ள ஹோட்டலொன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரான அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரின் மனைவி, தேசிய […]

error: Content is protected !!