இந்தியா

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்து – பலர் பலி!

  • November 13, 2025
  • 0 Comments

இந்தியாவின் புனேவில் இரண்டு லொறிகளும் ஒரு காரும் நேருக்கு நேர் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்திற்குப் பிறகு லொறி தீப்பிடித்து எரிந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் நிறுத்தப்பட்டு, பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் இந்திய ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் […]

பொழுதுபோக்கு

ரிவால்வர் ரீட்டாவாக கீர்த்தி சுரேஷ்!! வெளியானது டிரைலர்

  • November 13, 2025
  • 0 Comments

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் ரிவால்வர் ரீட்டா. கிரைம் காமெடி கலந்த கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரிவால்வர் ரீட்டா வரும் 28ஆம் திகதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் தான் இந்தப் படத்திலும் பணியாற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

உலகம் செய்தி

பாகிஸ்தான் தற்கொலை குண்டு தாக்குதல் – ஆப்கானிஸ்தான் மீது குற்றச்சாட்டு!

  • November 13, 2025
  • 0 Comments

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானே காரணம் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் இன்று குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து குற்றம் சாட்டியுள்ள  பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi),  “இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். தற்கொலை குண்டுதாரி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்” என்று எந்தவொரு ஆதாரத்தையும் வழங்காமல்  தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகள் […]

இலங்கை

ஓய்வை அறிவித்தார் சமன் ஸ்ரீ ரத்நாயக்க!

  • November 13, 2025
  • 0 Comments

தேர்தல் ஆணையர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமன் ஸ்ரீ ரத்நாயக்க, இன்று தனது பதவியிலிருந்தும், அரசு சேவையிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த 34 ஆண்டுகளாக ஒரு அரசு அதிகாரியாக பணியாற்றி வருவதாகக் கூறினார். தேர்தல் ஆணையர் நாயகமாக தனது கடமைகளைச் செய்வதில் தனக்கு உதவிய அனைத்து முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி செயலாளர்கள், பல்வேறு மாநில நிறுவனங்களின் அதிகாரிகள், முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் […]

ஐரோப்பா செய்தி

ஜரோப்பிய நாடுகளில் தாக்குதல் நடத்த சதி திட்டம் – ஜெர்மனியில் பிடிபட்ட நபர்!

  • November 13, 2025
  • 0 Comments

ஜேர்மனியின் செக் (Czech) எல்லைக்கு அருகில் ஹமாஸ் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் நபரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். குறித்த நபர் நாட்டிற்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டதாக வழக்குறைஞர்கள் நேற்று தெரிவித்துள்ளனர். லெபனானில் பிறந்த குறித்த நபர் ஜெர்மனியிலும் ஐரோப்பாவின் பிற இடங்களிலும் உள்ள இஸ்ரேலிய அல்லது யூத தளங்களைத் தாக்குவதற்காக ஆயுதங்களைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக வழக்குறைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சந்தேக நபர் கார்ல்ஸ்ரூஹேவுக்கு (Karlsruhe) மாற்றப்படவுள்ளதாகவும், காவலில் வைக்கப்படுவாரா என்பதை தீர்மானிக்க நீதிமன்றத்தின் முன் […]

இலங்கை

எம்.பிகளுக்கான வாகன அனுமதி சீட்டு நிறுத்தப்படுவது பழைய யோசனை!

  • November 13, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிச் சீட்டுகளை நிறுத்துவது குறித்து அரசாங்கம் பெருமை பேசுவதாகக் கூறிய இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக,  இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் கொண்டுவரப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  2020 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிச் சீட்டுகளை வழங்குவதை நிறுத்த கோட்டாபய ராஜபக்ச […]

உலகம் செய்தி

AI தொழில்நுட்பத்தை திருமணம் செய்த ஜப்பானிய பெண்!

  • November 13, 2025
  • 0 Comments

ஜப்பானியப் பெண் ஒருவர் ChatGPT என்ற chatbot-இல் உருவாக்கிய AI ஆளுமையை “திருமணம்” செய்து கொண்டுள்ளார். 32 வயதான கனோ என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண் கிளாஸ் என்ற AI தொழில்நுட்பத்தை  திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்த திருமணத்தை “2D கதாபாத்திர திருமணங்களில்” நிபுணத்துவம் பெற்ற ஒகயாமா நகர நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. ஆறுதல் மற்றும் ஆலோசனைக்காக ஏஐ தொழில்நுட்பத்தை நாடிய அவர் பின்னர் அதன்பால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் கனோவின் “திருமணம்” ஜப்பானில் சட்டப்பூர்வமாக […]

ஐரோப்பா செய்தி

வேலைநேரம் 13 மணித்தியாலம் – சர்சைக்குரிய சட்டத்தை இயற்றிய கிரேக்கம்!

  • November 13, 2025
  • 0 Comments

கிரேக்க அரசாங்கம் தனியார் துறை ஊழியர்கள் ஒரு நாளைக்கு 13 மணித்தியாலம் பணிப்புரிவதற்கான சர்ச்சைக்குரிய சட்டத்தை இயற்றியுள்ளது. ஆனால் விமர்சகர்கள் அதன் சட்டபூர்வமான தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாக இது ஐரோப்பிய ஒன்றியத்தின் வேலை நேர உத்தரவுக்கு இணங்குவதாகவும், நீண்ட நேரம் வேலை செய்தாலும், குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவர அலுவலகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) ஆகியவற்றின் தரவுகளின்படி, முழுநேர ஊழியர்கள் ஆண்டுக்கு சுமார் 1,900 மணிநேரம் […]

ஐரோப்பா

2029 அல்லது 2030 ஆம் ஆண்டில் மிகப் பெரிய போருக்கு தயாராகும் ரஷ்யா!

  • November 13, 2025
  • 0 Comments

2029 அல்லது 2030 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பா மீது ஒரு ‘பெரிய போரை’ கட்டவிழ்த்துவிட ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா மற்றுமொரு நில அபகரிப்பிற்கு தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்ய இராணுவத் துறையைப் பார்க்கும்போது, ​​அவர்கள் தங்கள் உற்பத்தியை அதிகரித்து வருவதைக் காண்கிறோம். எங்கள் மதிப்பீட்டில், அவர்கள் இந்தப் போரைத் தொடர விரும்புகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ரஷ்யா மீது அதிக அழுத்தம் கொடுக்க […]

இந்தியா செய்தி

டெல்லியின் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றவாளிகள்!

  • November 13, 2025
  • 0 Comments

டெல்லி செங்கோட்டை அருகே இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சம்பவத்தில் 08 பேர் உயிரிழந்த நிலையில், பயங்கரவாத செயலாக கருதப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் நபி உட்பட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மருத்துவர்கள் இந்தியாவின் பல பாகங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 6 ஆம் திகதி டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் அவர்கள் தாக்குதல் […]

error: Content is protected !!