இலங்கை

கொழும்பில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்!

  • November 13, 2025
  • 0 Comments

கொழும்பில் உள்ள காசல் தெரு மகளிர் மருத்துவமனையில் கடந்த 10 ஆம் திகதி இணைந்த இரட்டைப் பெண்கள் பிறந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பன்னாலையைச் சேர்ந்த 29 வயது தாய்க்கு சிசேரியன் மூலம் இரட்டையர்கள் பிரசவிக்கப்பட்டதாக மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அஜித் தண்டநாராயணா தெரிவித்தார். குழந்தைகளில் ஒன்று 2.2 கிலோகிராம் எடையும், மொத்த எடை 4.4 கிலோகிராம் ஆகவும் பதிவாகியுள்ளது. இரண்டு குழந்தைகளும் நிலையான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டையர்கள் வயிற்றில் இணைக்கப்பட்டுள்ளனர், மேலும் மூன்று மாதங்களில் […]

இலங்கை

இலங்கையில் 10000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை!

  • November 13, 2025
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து இலங்கையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதற்கமைய உலக சந்தையில் இன்று   தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,212 அமெரிக்க டொலர்களைத் தாண்டியது. இதற்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சுமார்   10,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. அதன்படி, கொழும்பு புறக்கோட்டை தங்கச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 310,800 ஆக உயர்ந்துள்ளது, இது நேற்று (12)   301,500 ரூபாயாக  இருந்தது. இதற்கிடையில், நேற்று சுமார்  […]

செய்தி

சிங்கப்பூரில் போலி டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி குறித்து மக்கள் எச்சரிக்கை

  • November 13, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் போலி டிஜிட்டல் அடையாள அட்டைகளை வைத்து புதிய மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாகக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நடைமுறையில் இருக்கும் நிஜமான அடையாள அட்டையைப் போன்றே போலியான அடையாள அட்டைகளை மோசடியாளர்கள் தயாரிக்கின்றனர். அதைக் கொண்டு பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் புதிய வங்கிக் கணக்குகளைத் தொடங்க முயற்சிப்பது பிரதானமானது என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடி குறித்து அனைத்து வங்கிகளுக்கும் சிங்கப்பூர் நாணய வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதி […]

இலங்கை

இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு – நெருக்கடியில் மக்கள்

  • November 13, 2025
  • 0 Comments

இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை பாரிய அளவில் உயர்வடைந்துள்ளதால் கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை விலங்குகள் நலச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய, தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை அதிகரித்துள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த அபரிமிதமான அதிகரிப்பால், ஒவ்வொரு வருடமும் சுமார் 250,000 தெரு நாய்க்கடி சம்பவங்கள் பதிவாவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், விலங்கு நலன் மூலம் சமூகப் பாதுகாப்பிற்கான கண்டிச் சங்கத்தின் செயலாளர் […]

ஐரோப்பா

பிரித்தானியாவை அச்சுறுத்தும் இணைய தாக்குதல் – கடுமையாகும் சட்டம்

  • November 13, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் அண்மைக் காலமாக இணையவெளித் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அரச சேவைகளைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய சட்டங்களைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிரித்தானிய தேசிய சுகாதாரச் சேவை (NHS) போன்ற அரசாங்க அமைப்புகளுக்கும், தனியார் துறை நிறுவனங்களுக்கும் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உயர் பாதுகாப்புத் தரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு, தேசிய சுகாதாரச் சேவை, மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற […]

இலங்கை

இலங்கையில் போலி காவல்துறையினர் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • November 13, 2025
  • 0 Comments

இலங்கையில் காவல்துறை சீருடை அணிந்துகொண்டு மக்களை ஏமாற்றும் போலி நபர்கள் பற்றி கவனமாக இருக்க வேண்டுமென காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய சீருடையில் வீடுகளுக்கு வருகை தருவோரின் ஆள் அடையாளங்களைச் சோதிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என காவல்துறை ஊடகப் பேச்சாளரான உதவிப் காவல்துறை அத்தியட்சகர் எவ்.யு.வூட்லர் தெரிவித்தார். வீடுகளுக்கு வருவோரிடம் காவல்துறையின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையைப் பொதுமக்கள் கேட்க முடியும். சந்தேகம் ஏதும் இருப்பின் உடனடியாக அதிகாரிகளுக்கு முறையிட வேண்டும். மேலும், தமது வலயத்திற்குப் பொறுப்பான […]

கருத்து & பகுப்பாய்வு

வர்த்தக மேடையில் மீண்டும் இணையும் ட்ரம்ப் – மோடி சலுகை எண்ணெயிலிருந்து நட்பு ஒப்பந்தம் வரை

  • November 13, 2025
  • 0 Comments

உலக அரசியல் மேடையில் மீண்டும் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகும் போல் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான உறவில் மந்தநிலை இருந்தாலும், வர்த்தகக் கூட்டாண்மை வழியாக மீண்டும் இணைவதற்கான அறிகுறிகள் வெளிப்படுகின்றன. இதற்கான முதல் அடியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்து வைத்துள்ளார். சர்வதேச வர்த்தகச் சூழல் பதற்றமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா–இந்தியா உறவு மீண்டும் நேர்மறை திசையில் நகர்கிறது. இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி […]

உலகம்

தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை நாடு கடத்தல்

  • November 13, 2025
  • 0 Comments

தென்கிழக்கு ஆசியாவில் சட்டவிரோத சூதாட்டச் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சீனப் பிரஜை ஒருவர் நாடு கடத்தப்படுகிறார். இந்த மனிதரின் பெயர் ஷேய்க் சிஜியாங் என்பதாகும். இவர் சீன அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இவரைச் சீனாவிற்கு நாடு கடத்த வேண்டுமென தாய்லாந்து நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. தாய்லாந்து மன்னர் சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளத் தயாராகும் சந்தர்ப்பத்தில் இந்த நாடு கடத்தல் நிகழ்கிறது.

உலகம்

ஆப்கானிஸ்தானில் மூன்று வேளை உணவு இல்லாமல் போராடும் குடும்பங்கள்

  • November 13, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் பொருளாதார மீட்சி சிக்கல்களை எதிர்கொள்ளும் விடயம் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. அந்நாட்டிலுள்ள 10 குடும்பங்களில் 9 குடும்பங்கள் மூன்று வேளை உணவு உண்ண முடியாமல் சிரமப்படுவதாக ஐ.நா. அபிவிருத்தித் திட்டப் பிரிவு அறிவித்துள்ளது. சில குடும்பங்கள் ஒரு வேளை உணவைத் தவிர்க்கின்றன அல்லது கடன் வாங்கி உயிர் வாழ்கின்றன என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தாலிபான் இயக்கம் மீண்டும் ஆட்சி பீடமேறியதைத் தொடர்ந்து, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து 45 இலட்சத்துக்கும் […]

இலங்கை

இலங்கையில் சகல துறைகளையும் டிஜிட்டல் மயமாக்க தயாராகும் அரசாங்கம்!

  • November 13, 2025
  • 0 Comments

இலங்கையில் சகல துறைகளையும் டிஜிட்டல் மயமாக்குவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தி இருப்பதாகப் பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வேலை தேடுபவர்களுக்குப் பதிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆட்களை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி கொழும்பில் உள்ள மண்டபக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவும் உரையாற்றினார். இலங்கை மக்கள் உலகத்துடன் […]

error: Content is protected !!