அரசியல் இலங்கை

என்.பி.பி. அரசை கைவிட்டனரா புலம்பெயர் தமிழர்கள்?

  • November 26, 2025
  • 0 Comments

புலம்பெயர் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாததாலேயே ஆளுங்கட்சியான ஜே.வி.பியின் செயலாளருக்கு எதிராக லண்டனில் போராட்டம் வெடித்தது என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஜே.வி.பியின் செயலாளருக்கு எதிராக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. தேர்தல் காலத்தில் ஆதரவு வழங்கிய அந்த குழு தற்போது விலகிச் சென்றது ஏன் எனவும் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த […]

அரசியல் இலங்கை

மாவீரர் தின நினைவுகூரல் அனுமதியை மூடிமறைக்கவே லண்டனில் போராட்டம்!

  • November 26, 2025
  • 0 Comments

மாவீரர் தினத்தை நினைவுகூர இடமளிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மூடிமறைக்கும் நோக்கிலேயே லண்டனில் போலி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார். ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் சிலர் நடத்திய போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். “ மேற்படி போராட்டத்தையடுத்து புலிகளின் எதிர்ப்புக்கு ஜே.வி.பி. அரசாங்கமும் ஆளாகிவிட்டதென சிலர் நினைக்கலாம். இது கொள்கை தொடர்பான எதிர்ப்பு அல்ல. ஜனாதிபதி தேர்தலுக்கு […]

ஐரோப்பா

லண்டனில் உள்ள கவுன்சில்கள் மீது சைபர் தாக்குதல்!

  • November 26, 2025
  • 0 Comments

லண்டனில் உள்ள பல கவுன்சில்கள் கடந்த திங்கட்கிழமை காலை முதல் சைபர் தாக்குதல்களுக்கு இலக்கானதாக அறிவித்துள்ளன. கென்சிங்டன் (Kensington), செல்சியா (Chelsea), ஹேமர்ஸ்மித் (Hammersmith), புல்ஹாம் (Fulham), மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster City) சிட்டி உள்ளிட்ட பல கவுன்சில்கள் இதனால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தரவைப் பாதுகாக்கவும், சேவைகளை மீட்டெடுக்கவும் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்துடன் (NCSC) இணைந்து பணியாற்றி வருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குறித்த தாக்குதலால் ஏதேனும் தகவல்கள் திருடப்பட்டுள்ளதா? மற்றும் தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்கள் […]

இலங்கை

வேலையின்றி இருக்கும் 3 இலட்சத்து 65 ஆயிரம் பேர் – பிரதமர் தகவல்!

  • November 26, 2025
  • 0 Comments

இலங்கையில் தற்போது  365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாக பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  2024 தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, ஆண்டின் முதல் காலாண்டிற்கான வேலையின்மை விகிதம்  4.5% இலிருந்து 2025 இல் 3.8% ஆகக் குறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான வேலையின்மை விகிதம், 4.7% ஆக இருந்தது, […]

உலகம்

தனது குழந்தைகளை கொலை செய்து சூட்கேசில் மறைத்து வைத்த நியூசிலாந்து பெண் – நீதிமன்றத்தின் தீர்ப்பு!

  • November 26, 2025
  • 0 Comments

தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று, அவர்களின் உடல்களை சூட்கேசில் மறைத்து வைத்த நியூசிலாந்து பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஹக்கியுங் லீ  (Hakyung Lee) என்ற அந்தப் பெண், தனது கணவர் புற்றுநோயால் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. எட்டு வயதான  யூனா ஜோ (Yuna Jo) மற்றும் ஆறு வயதான  […]

இலங்கை

மத்தியமலைநாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

  • November 26, 2025
  • 0 Comments

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு நிலச்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கை இன்று  காலை 8:00 மணி முதல் நாளை (27) இரவு 8:00 மணி வரை அமலில் இருக்கும். அறிவிப்பின்படி, கண்டி மாவட்டத்தின் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவு (DSD) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தந்தஹின்ன, மதுரட்ட மற்றும் ஹங்குராங்கெத்த பிரதேச செயலகப் பிரிவுகள் […]

இலங்கை

மாகாண சபை முறைக்கு அஸ்தமனம் – ஜே.வி.பி புதிய வியூகம்

  • November 26, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபை முறைமையைப் பதிலீடு செய்யும் பிறிதொரு முறைமை தொடர்பாக ஆலோசித்து வருகின்றது என்றும், இந்தியாவுக்குச் செல்லவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இது தொடர்பில் அங்கு கலந்துரையாடுவார் என்றும் தெரியவருகிறது. மாகாண சபைத் தேர்தல் ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தாலும், இன்னமும் தேர்தல் நடத்தப்படவில்லை. கடந்த வாரம் இலங்கைத் தமிழரசுக் கட்சிப் […]

இலங்கை

இலங்கை மக்கள் தொகையில் 10% பேருக்கு சிறுநீரக நோய் – வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை

  • November 26, 2025
  • 0 Comments

இலங்கை மக்கள் தொகையில் பத்து சதவீதம் (10%) பேருக்குச் சிறுநீரக நோய் ஏற்பட்டுள்ளதாகவும், பதினைந்து சதவீதம் (15%) வரையான முதியவர்களுக்கு சிறுநீரக நோய் இருக்கக்கூடும் எனவும் மாளிகாவத்தை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் வைத்தியர் அனுபாமா டி சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே போது இவ்வாறு கூறியுள்ளார். சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்குச் சிறந்த தீர்வு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு […]

செய்தி

மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்!

  • November 26, 2025
  • 0 Comments

நாணயக் கொள்கை வாரியத்தின் நேற்றைய கூட்டத்தில் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய 7.75% இல் பராமரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் முன்னேற்றங்கள் மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய முனைகளில் ஏற்படும் கண்ணோட்டத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. பணவீக்கம் முன்னர் கணிக்கப்பட்டதை விட படிப்படியாக உயர்ந்து 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இலக்கை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பணவியல் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை 5% […]

உலகம்

நைஜீரியாவில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட சில மாணவர்கள் மீட்பு!

  • November 26, 2025
  • 0 Comments

வடமேற்கு நைஜீரியாவில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட 24 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவம்பர் 17 ஆம் திகதி கடத்தப்பட்ட குழுவே தற்போது மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதி போலா டினுபு  (Bola Tinubu) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படகிறது. மேலும் கடத்தல் சம்பவங்களைத் தவிர்க்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.  

error: Content is protected !!