அரசியல் இலங்கை

இலங்கை மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை!

  • November 26, 2025
  • 0 Comments

இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவருகின்றன. அவர்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். அதேபோல கடல்வளங்களை பாதுகாப்பதற்கும், ஏற்றுமதியை நோக்கி நகர்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத்திட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, இலங்கையின் கடல்வளம் மற்றும் மீன்பிடித்துறை […]

இலங்கை

சீரற்ற காலநிலை – மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

  • November 26, 2025
  • 0 Comments

நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 877 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எழுவர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு , மரம் முறிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களாலேயே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 4 வீடுகள் முழுமையாகவும், 250 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலையால் 33 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் மூன்று தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, அடுத்து சில நாட்களுக்கு சீரற்ற காலநிலை […]

ஐரோப்பா

”கத்தோலிக்கர்களுக்கு ஒரு துணை போதும்” – வத்திக்கான் வலியுறுத்தல்!

  • November 26, 2025
  • 0 Comments

கத்தோலிக்கர்களுக்கு ஒரு துணை போதும் என்று வத்திக்கான் நேற்று அறிவித்துள்ளது. போப் லியோவால் அங்கீகரிக்கப்பட்ட  புதிய ஆணையில், உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு துணையை மணக்க வேண்டும் என்றும் பல பாலியல் உறவுகளை வைத்திருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருச்சபை உறுப்பினர்கள் உட்பட ஆப்பிரிக்காவில் பலதார மண நடைமுறையை விமர்சித்த வத்திக்கான், திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான வாழ்நாள் உறுதிப்பாடு என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளது. “ஒவ்வொரு உண்மையான திருமணமும் இரண்டு […]

உலகம்

வங்க தேசத்தில் குடிசை வீடுகளில் தீவிபத்து – 1500 வீடுகள் நாசம்!

  • November 26, 2025
  • 0 Comments

வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள குடிசை வீடுகளில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால்  1,500 வீடுகள்  தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். டாக்காவில் உள்ள குடிசை வீடுகளின் வரிசையில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. தீயை அணைக்க சுமார் 19 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், 05 மணிநேர போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

இந்தோனேசியாவில் கடும் மழை – 10 பேர் பலி, அவசர தங்குமிடங்கள் அமைப்பு!

  • November 26, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏறக்குறைய 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மண்டேலிங் நடால் (Mandailing Natal) பகுதியில் பாலம் இடிந்து விழுந்ததில் 470 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், நியாஸ் தீவில் ( Nias island) நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அவசரகால தங்குமிடங்கள் […]

உலகம் செய்தி

சீனாவின் அச்சுறுத்தல் – பாதுகாப்பு செலவீனத்தை அதிகரித்த தைவான்!

  • November 26, 2025
  • 0 Comments

சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு செலவீனத்தை அதிகரிக்க தைவான் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய $1.25 டிரில்லியன் ($61.2 பில்லியன்) துணை பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி லாய் சிங்-டே (Lai Ching-te) இன்று தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாக நிர்வகிக்கப்படும் தைவானை அதன் சொந்த பிரதேசமாகக் கருதும் சீனா, கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது உரிமைகோரல்களை உறுதிப்படுத்த இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை அதிகரித்துள்ளது. இதனை கடுமையான மறுத்துவரும் தைவான் அமெரிக்கா உள்ளிட்ட […]

பொழுதுபோக்கு

நிர்வாணக் காட்சியில் ஆண்ட்ரியா : என்ன காரணம்?

  • November 26, 2025
  • 0 Comments

நடிகை ஆண்ட்ரியா தயாரித்து கவினுடன் இணைந்து நடித்த மாஸ்க் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போடுகின்றது. இதுவரை இப்படம் சுமார் 5 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும், டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவிலும் ஆண்ட்ரியா பாடவுள்ளார். இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியா, “பிசாசு – 2 திரைப்படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தது குறித்து பேசியுள்ளார். “பிசாசு -2 கதையில் நான் நிர்வாணமாக நடிக்க வேண்டிய […]

இலங்கை

பாம்புக் கடிக்கு இலக்காகி 04 பிள்ளைகளின் தாயார் உயிரிழப்பு!

  • November 26, 2025
  • 0 Comments

ஹொரவ்பொத்தானை -றத்மலையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயார் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அனுராதபுரம்  போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான எச். சமீனா (36 வயது) எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தெரிய வருவது, கனவல்பொல- ஊத்துப்பிட்டி என்ற இடத்திற்கு தனது கணவரின் உறவினர் ஒருவரின் மரண வீட்டிற்குச் சென்ற போது குறித்த வீட்டுக்கு பின்னால் பாம்பு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் அஜாக்ஸ் (Ajax) கவச வாகனங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல்!

  • November 26, 2025
  • 0 Comments

பிரித்தானிய இராணுவம் அஜாக்ஸ் (Ajax) கவச வாகனங்களைப் பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. சாலிஸ்பரி (Salisbury) சமவெளியில் சமீபத்தில் நடந்த போர் பயிற்சியின் போது சுமார் 30 வீரர்கள் உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் இருந்து வரும் சத்தம் மற்றும் அதிர்வு காரணமாக பணியாளர்கள் உடல்நிலை பாதிப்பை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகம் இந்த வாகனங்களின் பயன்பாட்டை இரண்டு வாரக்காலப்பகுதிக்கு இடைநிறுத்தியுள்ளதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த வகையான வாகனங்கள் […]

அரசியல் இலங்கை

இனவாதத்துக்கு சமாதி கட்டுமாறு சஜித் வலியுறுத்து

  • November 26, 2025
  • 0 Comments

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மதவாதம மற்றும் இனவாத மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக உடனடியாக தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் , எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளனர். “ அரசியலமைப்பில் நமது நாடு ஜனநாயக நாடாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடைமுறையில் யதார்த்தமாக்குவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். இனங்கள், மதங்களுக்கு இடையில் ஒற்றுமையையையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த பழமைவாதக் கருத்துக்களுக்கு அப்பால் சென்ற தனித்துவமான பணி எம்முன்னால் […]

error: Content is protected !!