உலகம் செய்தி

கலிபோர்னியாவில் (California) பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த துயரம்!

  • November 30, 2025
  • 0 Comments

கலிபோர்னியாவின் (California) ஸ்டொக்டனில் (Stockton) அமைந்துள்ள விருந்துபச்சார மண்டபம் ஒன்றில் நேற்று மாலை பாரிய  துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேற்படி மண்டபத்தில் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றதாக  ஸ்டொக்டன் மேயர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும்,  அதிகாரிகள் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. யாரேனும் ஒருவரை குறி வைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் […]

இலங்கை

மாவிலாறு பகுதியில் சிக்கியிருந்த 121 பேர் மீட்பு

  • November 30, 2025
  • 0 Comments

மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 121 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகம் செய்தி

வெனிசுலாவோடு அதிகரிக்கும் மோதல் – விமான நிறுவனங்களை எச்சரித்த ட்ரம்ப்!

  • November 30, 2025
  • 0 Comments

வெனிசுலாவுடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு ட்ரம்ப் புதிய கட்டளையை பிறப்பித்துள்ளார். அதன்படி வெனிசுலா வான்வெளியை முழுவதுமாக மூடுவது குறித்து பரிசீலிக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாதுகாப்பு மோசமடைந்து வருவதாலும், இராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பதாலும், வெனிசுலா மீது பறக்கும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் (FAA) விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. போதைப்பொருள் பயங்கரவாதிகளை” எதிர்த்துப் போராடவும், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அதிகாரத்திலிருந்து […]

இலங்கை

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு!

  • November 30, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் சேர்த்து நடத்த திட்டமிடப்பட்டிருந்த மற்ற அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் இந்திக லியனகே தெரிவித்தார். தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக, பரீட்சைகள் தொடர்பாக அதிக அளவிலான கேள்விகள் திணைக்களத்திற்கு வருவதாகவும், அதனை தெளிவுப்படுத்தும் வகையில் குறித்த அறிவிப்பு மீளவும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்திக […]

இலங்கை முக்கிய செய்திகள்

சீரற்ற வானிலை : 193 பேர் உயிரிழப்பு, 200இற்கும் மேற்பட்டோர் மாயம்!

  • November 30, 2025
  • 0 Comments

கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) உறுதிப்படுத்தியுள்ளது. பேரிடர் மேலாண்மை மையம் (DMC)  இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக பதுளை மாவட்டத்தில்  71 பேர் பலியாகியுள்ளனர். குறைந்தது 228 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 25 மாவட்டங்களில் 266,114 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 968,304 […]

இந்தியா இலங்கை

இலங்கையில் சிக்கியுள்ள 150 தமிழர்களை மீட்க புறப்பட்டது இண்டிகோ விமானம்

  • November 30, 2025
  • 0 Comments

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் சிக்கியுள்ள 150 தமிழர்களை மீட்க இந்தியா இண்டிகோ விமானம் மூலமாக பாதுகாப்புடன் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக இலங்கையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சுமார் இரண்டு வாரங்களாக மழை பெய்து வருவதால், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளன. கடந்த […]

பொழுதுபோக்கு

கமல் – ரஜினி கூட்டணியில் இணையும் சாய் பல்லவி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • November 30, 2025
  • 0 Comments

கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர் 173 படத்தில் நடிகை சாய் பல்லவி நடிப்பதாக கூறப்படுகின்றது. தமிழ் சினிமாவை தாண்டி பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழில் இறுதியாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்து பட்டையை கிளப்பியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர்173 படத்தில் சாய் பல்லவி நடிக்கிறாராம். முதலில் […]

இலங்கை

வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம் : பொலிஸார் கோரிக்கை

  • November 30, 2025
  • 0 Comments

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சேதமடைந்த பாலங்கள் போன்ற இடங்களை வேடிக்கை பார்ப்பதற்காகச் செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக பல இடங்களில் ஆபத்துகள் காணப்படுவதால், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். சிலர் ஆபத்தை அறியாமல பொழுதுபோக்கிற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் சென்று உயிருக்கு ஆபத்தை தேடிக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார். சமூகவலைத்தளங்களில் இவற்றை அவதானிக்க முடிந்தாகவும், எனவே ஆபத்துடன் விளையாட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இலங்கை

24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவான இடங்கள்

  • November 30, 2025
  • 0 Comments

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவாகிய இடங்களை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) வெளியிட்டுள்ளது. இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தின் பொக்கணை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அங்கு 274 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொக்கணை (கிளிநொச்சி): 274 மி.மீ போர்த்துகெரி (மன்னார்): 210 மி.மீ மடு (மன்னார்): 193 மி.மீ துனுமலே தோட்டம் (கேகாலை): 181 மி.மீ கிரிந்திவெல (கம்பஹா): 121 மி.மீ கிளென்தில்ட் தொழிற்சாலை (நுவரெலியா): 104 மி.மீ  

பொழுதுபோக்கு

தலைப்பில் சர்ச்சை! “வாரணாசி” படத்தின் பெயர் மாற்றப்பட்டது…

  • November 30, 2025
  • 0 Comments

மகேஷ் பாபு – ராஜமௌலி கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “வாரணாசி” படத்தின் தலைப்பு சர்ச்சையில் சிக்கியது. ராமபக்த ஹனுமா என்ற நிறுவனம் இந்த தலைப்பை முன்பே பதிவு செய்திருந்தது. அதே பெயரை ராஜமௌலி அறிவித்ததால் சர்ச்சை எழுந்தது. படத்தின் தலைப்பினால் ஏற்பட்ட சட்ட-சர்ச்சை, படக்குழுவை பெயர் மாற்றத்திற்குத் தள்ளியது. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது புதிய தலைப்பு அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.. இந்த படத்திற்கு எந்த சட்ட சிக்கலும் வேண்டாம் என்பதற்காகவே, ராஜமௌலியும் தயாரிப்பாளர்களும் பெயரை […]

error: Content is protected !!