இலங்கை

யாழ்ப்பாண மக்களுக்கு ஏற்படப்போகும் பேராபத்து!

  • November 29, 2025
  • 0 Comments

தற்போது பெய்த மழை காரணமாக பல்வேறு சிக்கலான நிலைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மழைநீர் பல்வேறு வாழ்விடங்களில் புகுந்ததன் காரணமாக லெப்டோஸ்பைரோசிஸ் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், தோல் வியாதிகள், சுவாசத் தொற்றுகள், வயிற்றோட்டம் போன்ற நோய்களும் ஏற்படலாம். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அசுத்தமான நீரில் நடைபயணம் செய்த பிறகு, அல்லது அந்த பகுதிகளில் சென்று வந்தால், சவர்க்காரம் பயன்படுத்தி […]

இலங்கை

இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159ஆக அதிகரிப்பு

  • November 29, 2025
  • 0 Comments

இலங்கையில் டிக்வா புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட பேரழிவுகளில் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 203 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (29) இரவு 8.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, 25 மாவட்டங்களைச் சேர்ந்த 234,503 குடும்பங்களைச் சேர்ந்த 833,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 34,119 குடும்பங்களைச் சேர்ந்த 122,822 பேர் தற்போது 919 பாதுகாப்பான நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

செய்தி

அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சம்மதம்

  • November 29, 2025
  • 0 Comments

தொடர்ந்து நிலவும் பேரிடர் சூழ்நிலையின்போது அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், அதே நேரத்தில் வலையமைப்பு நெரிசலைக் (Network Congestion) குறைப்பதட்கும் தொலைத்தொடர்பு இயக்குநர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இன்றையதினம் (நவம்பர் 29, 2025) இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் அணைக்குழுவிற்கும் (TRCSL – Telecommunications Regulatory Commission of Sri Lanka) அரசாங்கத்திற்கும் முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது. தற்போதுள்ள பாதகமான வானிலை மற்றும் பேரிடர் நிலை காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் […]

sri lanka emegency செய்தி

இலங்கையில் பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு; 191 பேரைக் காணவில்லை

  • November 29, 2025
  • 0 Comments

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு பேரிடரில் சிக்குண்டு பலியானோரின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளதுடன், 191 பேர் இன்னும் காணவில்லை என்று பேரிடர் முகாமைத்துவ நிலையம் (DMC) இன்று (நவம்பர் 29, 2025) அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிரிழப்பு மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, தேடுதல் குழுக்கள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கிய மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பல பகுதிகளை அடைய முடியாமல் சிரமப்படுவதால், மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இராணுவம், பொலிஸ் மற்றும் […]

செய்தி

பேரிடர் மேலாண்மை மையம்: உயர் அபாயப் பகுதிகளில் உள்ளோருக்கு வலியுறுத்தல்

  • November 29, 2025
  • 0 Comments

பேரிடர் முகாமைத்துவ நிலையம் (DMC),மாவட்டம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், தொடர்ச்சியான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் சில குடியிருப்பாளர்கள் உயர் அபாயப் பகுதிகளிலிருந்து வெளியேற மறுக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்குச் சூழலுக்கு மத்தியில், அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் அனைத்து தனிநபர்களும் உடனடியாக அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய, குடியிருப்பாளர்கள் அரசாங்கத்தின் கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பது அத்தியாவசியம் […]

இலங்கை செய்தி

இலஞ்சம் ஆணைக்குழுவின் போலி அறிக்கை மறுப்பு

  • November 29, 2025
  • 0 Comments

அனர்த்த நிலைமைகளின்போது அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் எந்தவொரு அறிக்கையையும் தாம் வெளியிடவில்லை என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (Bribery Commission) மறுத்துள்ளது. இலஞ்சம் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் (Director General) வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு அறிக்கை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அவ்வாறான எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என பணிப்பாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் சங்கடப்படுத்தும் […]

உலகம் செய்தி

தெற்கு தாய்லாந்தில் வெள்ளம்: பல ஆண்டுகளில் இல்லாத பேரழிவு

  • November 29, 2025
  • 0 Comments

தெற்கு தாய்லாந்தில் பல வருடங்களில் இல்லாத மிக மோசமான வெள்ளப்பெருக்கைச் சந்தித்து வருகிறது. இடைவிடாது பெய்துவரும் மழை அப்பிராந்தியத்தைத் தாக்கி வருவதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். சோங்கலா மாகாணத்தில் வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்

உலகம் செய்தி

6000 விமானங்களை மீளப்பெறும் ஏர்பஸ் நிறுவனம்

  • November 29, 2025
  • 0 Comments

ஏர்பஸ் நிறுவனம் சுமார் 6,000 விமானங்களில் மென்பொருள் மாற்றங்களைச் செய்யக் கோரியுள்ளதால், விமானப் பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

கோத்மலை மண்சரிவு: 15 பேர் பலி, 50 பேர் காயம்

  • November 29, 2025
  • 0 Comments

கோத்மலை பிரதேசத்தின் ரம்போடகல பகுதியில் திடீரென ஏற்பட்ட மண்சரிவில் 15 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.   சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் அவர்கள் கோத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மண்சரிவு சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்பட்டுள்ளது.   ரம்போடகலாவிற்கான அனைத்து நுழைவு வீதிகளும் தற்போது தடைப்பட்டுள்ளதால், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக கோத்மலை மாவட்ட பிரதேச செயலகம் தெரிவித்து ளது.

இலங்கை செய்தி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்ட அறிக்கை

  • November 28, 2025
  • 0 Comments

நாட்டில் ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் மற்றும் அதன் தொடர்ச்சியான பாதிப்புகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி நவம்பர் 28, மாலை 6 மணி வரை 1,297 குடும்பங்களைச் சேர்ந்த 4,140 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்கவர்கள் தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் 32 குடும்பங்களைச் சேர்ந்த […]

error: Content is protected !!