ஐரோப்பா

லண்டனில் சுரங்க ரயில் ஓட்டுநர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஆரம்பம்!

  • April 21, 2026
  • 0 Comments

RMT தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சுரங்க ரயில் ஓட்டுநர்கள், இன்று நண்பகல் முதல் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்திற்கு எதிராக அவர்கள் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தொழிற்சங்கத்தின் அறிவிப்பின்படி முதல் நாள் வேலைநிறுத்தம் இன்று நண்பகல் லண்டன் அண்டர்கிரவுண்டில் ஆரம்பமாகியது. அதேபோல் அடுத்த வேலைநிறுத்த போராட்டம் வரும் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. வேலைநிறுத்தம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான வழித்தடங்களில் தாமதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டமானது தலைநகரின் பொது போக்குவரத்தை […]

உலகம்

நெதன்யாகு ஹங்கேரிக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்!! புதிய பிரதமர் உத்தரவு!

  • April 21, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு பயணம் செய்தால் கைது செய்யப்படுவார் என அந்நாட்டு பிரதமர் பீட்டர் மாக்யார் (Peter Magyar) தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (ICC) ஹங்கேரி விலகுவதை நிறுத்திவைப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். எனவே, நவம்பர் 2024 முதல் காசாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும்  நெதன்யாகு அந்நாட்டிற்குள் நுழைந்தால், ஹங்கேரிய அதிகாரிகள் அவரைக் கைது செய்யக் கடமைப்பட்டிருப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார். செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட […]

உலகம் செய்தி

ட்ரம்ப் மீது ஈரான் ஜெனரல் கடும் குற்றச்சாட்டு – போர் நிறுத்தம் குறித்து புதிய சர்ச்சை

  • April 21, 2026
  • 0 Comments

ஈரானின் மூத்த இராணுவத் தளபதி ஒருவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொய் கூறுகிறார் என்றும், போர் நிறுத்தத்திற்காக அவர் தீவிரமாகக் காத்திருக்கிறார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். ஈரானின் புரட்சிகரக் காவலர் படையுடன் (IRGC) தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மேஜர் ஜெனரல் அப்துல்லாஹி இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர், ஈரான் படைகள் இஸ்ரேலும் அமெரிக்காவும் சோர்வடையும் வரை அழுத்தம் கொடுத்ததாகவும், அதனால் அவர்கள் போர் நிறுத்தத்தை கோர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். […]

உலகம் செய்தி

பாகிஸ்தானில் மீண்டும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

  • April 21, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான நிச்சயமற்ற நிலை தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய வீதிகளில் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் எனும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அரசாங்கத்தின் தயார்நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொடர்புகளை வைத்திருக்கும் பாகிஸ்தான், இந்த சூழலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழ்நிலைகளில் பாகிஸ்தான் […]

இலங்கை செய்தி

நாட்டில் மருந்துப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் – அவசர நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு

  • April 21, 2026
  • 0 Comments

நாட்டின் மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளைத் தடையின்றி அணுகுவதை உறுதி செய்யும் நாட்டின் திறன் பாதிக்கப்படக்கூடும் என இலங்கை மருந்துத் தொழில்துறை சம்மேளனம் (SLCPI) எச்சரித்துள்ளது. இந்த மருந்துப் பற்றாக்குறை நெருக்கடியைத் தடுப்பதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. உடனடி மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தனியார் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் அதிகரித்து வரும் தட்டுப்பாட்டை இலங்கை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வேலையின்மையில் எதிர்பாராத சரிவு – வேலை சந்தையில் புதிய மாற்றம்

  • April 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் எதிர்பாராத வகையில் குறைந்துள்ளது என தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி வரையிலான மூன்று மாதங்களில் வேலையின்மை 4.9% ஆகக் குறைந்துள்ளது. இது முன்னதாக 5.2% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதேவேளை, வேலை தேடாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் மொத்த வேலைவாய்ப்பு கணக்கில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவர்கள் படிப்புடன் வேலை தேடுவதை குறைத்திருப்பதும் ஒரு காரணமாகும். இந்த காலகட்டத்தில் ஊதிய உயர்வு 3.6% ஆக இருந்துள்ளது. இது சமீப […]

உலகம் செய்தி

மாஸ்கோ பயணம் சர்ச்சை- அமெரிக்க தூதுவர்களை கடுமையாக விமர்சித்த செலென்ஸ்கி

  • April 21, 2026
  • 0 Comments

உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy, அமெரிக்க தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரின் மாஸ்கோ பயணம் தொடர்பாக கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். அவர்கள் மாஸ்கோவிற்கு பலமுறை சென்றபோதும், கீவ் நகருக்கு ஒருபோதும் வரவில்லை என்பது அவமரியாதையானது என செலென்ஸ்கி கூறியுள்ளார். இந்த இருவரும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்த காலத்தில் ரஷ்ய தலைநகருக்கு சென்றதாகவும், ஆனால் உக்ரைனுக்கு அதிகாரப்பூர்வமாக செல்லாததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் […]

உலகம்

வளைகுடா நாட்டிற்கு நிதியுதவி – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!

  • April 21, 2026
  • 0 Comments

வளைகுடா நாட்டில் நம்பகமான கூட்டாளிகள் என தாம் நம்பும் நாடுகளுக்கு நிதி உதவி அல்லது நாணயப் பரிமாற்றத்தை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். ஈரான் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஆழமாக பாதிக்கப்படும் பட்சத்தில், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஐக்கிய அரபு அமீரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடனான நாணயப் பரிமாற்றம் “பரிசீலனையில் உள்ளது” என்று ட்ரம்ப் சி.என்.பி.சி நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். அது நமது ஒரு நல்ல கூட்டாளியாக இருந்து […]

உலகம் செய்தி

ஈரானை சூழும் பொருளாதார பேரிடி – சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தல்

  • April 21, 2026
  • 0 Comments

ஈரானில் பொருளாதார நிலை மேலும் மோசமடையக்கூடும் என்ற அச்சத்தில், இஸ்லாமியக் குடியரசின் பாதுகாப்புப் படையினர் உட்பட பலர் மக்கள் சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம் தொடர்ந்தால், அரசாங்கம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படுமா? பேச்சுவார்த்தைகளை நிறுத்தும் நிலையை ஈரான் தாங்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. போருக்கு முன்பே பொருளாதார தடைகள், பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பிழப்பு காரணமாக மக்கள் கடுமையான நெருக்கடியில் இருந்தனர். அத்தியாவசிய தேவைகளுக்கே பெரும்பாலான குடும்பங்கள் செலவிடும் […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்தை நீடிக்குமாறு பாகிஸ்தான் அவசர கோரிக்கை!

  • April 21, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இருவாரகால தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் (22) நிறைவடையும் நிலையிலேயே இந்த அவசர கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவருடன் Natalie A. Baker இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் Ishaq ⁠Dar இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்தத்தை […]

error: Content is protected !!