காசாவில் அதிகமானோர் கொல்லப்படுவதால்,போர்நிறுத்த உத்தரவாதங்களை கோரியுள்ள ஹமாஸ்
போர் நிறுத்த உத்தரவாதங்களை ஹமாஸ் கோரியுள்ளது. அமெரிக்க ஆதரவுடன் புதிய போர் நிறுத்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்பரிந்துரைகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் என்ற உத்தரவாதம் தரப்பட வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனர்கள் பலர் உயிரிழந்ததாக மருத்துவ உதவியாளர்கள் கூறினர். வியாழக்கிழமையன்று (ஜூலை 3) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 59 பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இருப்பினும், போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்படுவதற்கான சாத்தியம் அதிகமாக […]













