இலங்கை

இலங்கையில் விவசாயிகளின் பிரச்சினைகளை விரைவில் தீர்வு – ஜனாதிபதி அறிவிப்பு

  • September 7, 2025
  • 0 Comments

இலங்கையில் விவசாயிகளின் விவசாய நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கான முறையான பொறிமுறையை வகுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மொனராகலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த ஆண்டு புதிதாக 62,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு

பாலஸ்தீனியர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலியப் படைகள் எச்சரிக்கை

  • September 7, 2025
  • 0 Comments

காசா நகரில் வசிக்கும் பாலஸ்தீனியர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலியப் படைகள் தெரிவித்துள்ளன. தெற்குப் பகுதிக்கு பாலஸ்தீனியர்களை தப்பிச் செல்லுமாறு அவர்கள் கூறியுள்ளனர். காசாவைத் தொடர்ந்து தாக்கி வரும் இஸ்ரேலிய நடவடிக்கைகள் வடக்கிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காசாவில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசித்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு இந்த அறிவிப்பு மற்றொரு அச்சுறுத்தல் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. போருக்கு முன்பு, சுமார் ஒரு மில்லியன் மக்கள் காசாவில் வசித்து வந்தனர். தெற்கு காசாவில் உள்ள கான் […]

ஐரோப்பா

முக்கிய இரசாயனத்துக்கு தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

  • September 7, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் சில வகை நகச் சாயங்களில் உள்ள முக்கிய இரசாயனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. trimethylbenzoyl diphenylphosphine oxide அல்லது TPO என்று அழைக்கப்படும் இரசாயனம் gel நகச் சாயம் விரைவில் உலர்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. அந்த ரசாயனம் கருத்தரிப்புப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியது என்பது விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக ஐரோப்பிய ஆணையம் குறிப்பிட்டுள்ளது. Gel வகை நகச் சாயம் வழக்கமான நகச் சாயத்துடன் ஒப்பிடுகையில் வேகமாக உலர்ந்துவிடும். அது வழக்கமான சாயத்தை விட அதிக […]

விளையாட்டு

ஆசிய கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

  • September 7, 2025
  • 0 Comments

”ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய லெவன் அணியில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும்,” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை ‘டி–20’ தொடர் (செப். 9–28) நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் சானலில் காணலாம். தவிர, ‘சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 தமிழ்’ சேனலில் தமிழ் மொழியில் வர்ணனை செய்யப்பட உள்ளது. ஆசிய கோப்பை குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் அளித்த பேட்டி: […]

அறிவியல் & தொழில்நுட்பம்

PDF பாஸ்வேர்டை நீக்குவது எப்படி?

  • September 7, 2025
  • 0 Comments

பாதுகாப்பான முறையில் ஆவணங்களைப் பகிர, பிடிஎஃப் பைல்கள் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஆனால், சில நேரங்களில், பாதுகாப்பு அம்சமே நமக்கு இடையூறாக அமையலாம். குறிப்பாக, ஒரு ஃபைலுக்குப் பாஸ்வேர்டு போட்டிருந்தால், அதை விரைவாக அணுகுவதோ? அல்லது பிறருடன் பகிர்ந்து கொள்வதோ கடினமாகலாம். பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ அல்லது அடிக்கடி பயன்படுத்தும்போது ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டை உள்ளிட வேண்டிய நிலை வந்தாலோ இது ஒரு சிக்கலாக மாறும். நீங்கள் சரியான முறையில் அணுகுவதற்கு அனுமதி உள்ளவராக இருந்தால், ஒரு பிடிஎஃப் பைலில் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

உக்ரைனில் உள்ள மேற்கத்திய துருப்புக்கள் ரஷ்யாவால் குறிவைக்கப்படுவார்கள் – புட்டின் எச்சரிக்கை

  • September 7, 2025
  • 0 Comments

உக்ரைனில் நிறுத்தப்பட்டுள்ள எந்தவொரு மேற்கத்திய துருப்புக்களும் ரஷ்யாவால் குறிவைக்கப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார். உக்ரைனின் 26 நட்பு நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வான், கடல் மற்றும் நிலம் மூலம் துருப்புக்களை அனுப்புவதாக உறுதியளித்துள்ளதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இதனையடுடுத்து, வியாழக்கிழமை விளாடிவோஸ்டாக்கில் நடந்த பொருளாதார மன்றத்தில் ரஷ்ய ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். ரஷ்யா-உக்ரைன் மோதலில் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்த டொனால்ட் டிரம்பின் முயற்சிகள் வெற்றிபெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை என்றாலும், […]

மத்திய கிழக்கு

காசா முழுவதையும் கைப்பற்ற முயற்சி – இஸ்ரேல் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

  • September 7, 2025
  • 0 Comments

இஸ்ரேல் அரசுக்கு எதிரான வலுக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேல் அரசு, காசா முழுவதையும் தங்களின் ராணுவ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முயற்சித்து வருகிறது. இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பின் வசமுள்ள பணயக்கைதிகளை மீட்கும் முயற்சியில் போரை நிறுத்த வேண்டும் எனக்கோரியும், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், கைதிகளின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஹமாஸ் வசமுள்ள 48 பணயக்கைதிகளில், 20 பேர் மட்டுமே உயிருடன் இருக்கக்கூடும் என இஸ்ரேல் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இலங்கை

இலங்கையில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

  • September 7, 2025
  • 0 Comments

எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோரை பயமுறுத்தும் வார்த்தைகள் மட்டுப்படுத்துமாறு எச்சரிக்கை

  • September 7, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து பங்களிக்கும் மக்களின் நோக்கங்களில் பயத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் வெறுப்புப் பேச்சுக்கு வரம்புகள் இருக்க வேண்டும் என விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார். சமீபத்திய குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். வெளியுறவுக் கொள்கை குறித்து மக்கள் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கலாம் என்று அவர் அறிக்கையில் மேலும் கூறினார். வெளியுறவுக் கொள்கை குறித்து மக்கள் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கலாம் என்றாலும், நம் நாட்டிற்கு வாழ்ந்து பங்களிக்கும் மக்கள் […]

இலங்கை

அநுர அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – கடும் கோபத்தில் நாமல் ராஜபக்ஷ

  • September 7, 2025
  • 0 Comments

அரசாங்கத்தின் தொடர்ச்சியான அவதூறு பிரச்சாரத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கடுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர், அரசாங்கம் தொடர்ச்சியான அவதூறு பிரச்சாரத்தை பொறுத்துக்கொண்டாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற ஒன்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார். தங்கக் குதிரைகள் பற்றிய கதைகள், துபாய் மேரியட் ஹோட்டலின் கதைகள், உகாண்டாவில் பணத்தின் கதைகள், ராக்கெட்டுகளின் கதைகள் உள்ளிட்ட […]

error: Content is protected !!