இலங்கை செய்தி

ஓய்வின் பின்னரும் உயரிய பதவி??

பாராளுமன்றத்தில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரி ஒருவர் விசேட குழுவொன்றில் உயர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வூதியத்திற்கு மேலதிகமாக வாகனங்கள் உட்பட சகல வசதிகளையும் முன்னைய பதவியின் முழு சம்பளத்தையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது இந்த நடவடிக்கை குறித்து அதிகாரிகள், ஊழியர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் பாராளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற இந்த அதிகாரி பல நாட்களாக பாராளுமன்றத்திற்கு வருகை தருவதாகவும் ஒவ்வொரு முறை வரும்போதும் பாராளுமன்றத்தில் இருந்து சொகுசு வாகனங்களையும் பெற்றுக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.

மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரின் ஒப்புதலின் பேரில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அமைச்சர்கள் பலர் அவரது நியமனம் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வாறான நியமனங்களை வழங்குவதும் ஏனைய வசதிகளை வழங்குவதும் பாரிய பிரச்சினையாக உள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content