இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியாவின் பெரும் பகுதிகளை வாட்டும் வெப்பம் – 48 செல்சியஸ் வரை பதிவு!

இந்தியாவின் பெரும் பகுதிகள் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

வானிலை ஆய்வாளர்கள் அதிகபட்சமாக 45 பாகை  செல்சியஸ் வரையான வெப்பநிலை பதிவாகும் என எச்சரித்துள்ள நிலையில், சில பகுதிகளில் 48 பாகை செல்சியஸ் வரையான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடும் வெப்பம் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் இரவு நேர பணிக்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பாடசாலைகள் முன் கூட்டியே கோடை விடுமுறையை அறிவித்துள்ளன.

இதற்கிடையே இந்தியாவின் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மனிதர்களின் தவறான செயற்பாடுகளே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2008 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், வெப்பத்தின் காரணமாக ஆண்டுதோறும் 1,116 பேர் வரை உயிரிழந்துள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே