இலங்கை

மனுஷ- ஹரின் மீது உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மனுத்தாக்கல்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தங்களுடைய கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டமை மற்றும் தம்மை பாராளுமன்றிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்டுள்ள தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை மாதம், அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ இருவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைந்ததையடுத்து கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்தது.

அதன் பின்னர், ஆகஸ்ட் மாதம், ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு முன்னர் விதிக்கப்பட்ட இடைநிறுத்தத்தை நீக்குவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) செயற்குழு தீர்மானித்தது.என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்