இலங்கை

இலங்கை தேர்தல் சட்டத்தை வேண்டுமென்றே மீறிய அரசாங்கம்: தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு

தற்போதைய அரசாங்கம் தேர்தல் சட்டத்தை வேண்டுமென்றே மீறியமை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பும் அதே வேளையில், ஜனாதிபதியின் ஆலோசகர்கள் இருவரை நியமிப்பது தொடர்பாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. .

ஜனாதிபதியின் ஆலோசகர்கள் இருவரை நியமித்துள்ளமை தேர்தல் சட்டத்தை மீறிய செயலாகவும், பொது நிதியை துஷ்பிரயோகம் செய்வதாகவும் அமைந்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட இருவரும் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, தேர்தல் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட ஒரு வேட்பாளரை ஊக்குவிக்கும் தந்திரோபாயமே இந்த நடவடிக்கையாகும்” என அவர் சுட்டிக்காட்டினார்.

“மேலும், இருவருக்குமான வாகனங்கள் உட்பட பலன்கள் பொது நிதியை தவறாக பயன்படுத்துவதாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேர்தல் பிரசாரங்களுக்கு ஐந்து அமைச்சுக்களின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல் சட்டத்தை மீறி அரச நிறுவனங்களில் 14 இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனவே, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இவ்வாறான செயற்பாடுகளை மன்னிக்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்